செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி- முதல் சுற்றிலேயே சுஷில் குமார் அதிர்ச்சி தோல்வி

Published On 2018-08-19 09:34 GMT   |   Update On 2018-08-19 09:34 GMT
ஆசிய போட்டி மல்யுத்தத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான சுஷில் குமார் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் தோல்வியடைந்தார். #AsianGames2018
ஆசிய போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. மல்யுத்தம் போட்டியில் இந்தியாவின் நட்டசத்திர வீரரும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் ஆன சுஷில் குமார் 74 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் பஹ்ரைனின் பேட்ரிரோவ்-ஐ எதிர்கொண்டார்.

முதலில் சுஷில் குமார் 2-1 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பஹ்ரைன் வீரர் சிறப்பாக விளையாடி சுஷில் குமாரை 5-3 என வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சுஷில் குமார் தொடக்க சுற்றோடு வெளியேறியுள்ளார்.



முதல் சுற்றில் தோல்வியடைந்தாலும் போட்டியில் இருந்து வெளியேறவில்லை. ஒருவேளை பேட்ரிரோவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் ரீபேக்கேஜ் மூலம் வெண்கல பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News