செய்திகள்

டிஎன்பிஎல் 2018- மதுரை பாந்தர்ஸ்க்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ்

Published On 2018-08-10 15:31 GMT   |   Update On 2018-08-10 15:31 GMT
தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிபையர் 2-ல் மதுரை பாந்தர்ஸ்க்கு கோவை கிங்ஸ் 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #ENGvIND
தமிழ்ந்நாடு பிரீமியர் லீக் தொடரின் 2-வது குவாலிபையர் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. மதுரை பாந்தர்ஸ்க்கு எதிராக டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் ஷாருக்கான் 4 ரன்னிலும், அபிநவ் முகுந்த் 28 ரன்னிலும், அதன்பின் வந்த ரவி குமார் ரோஹித் 5 ரன்னிலும் வெளியேறினார்கள்.



அதன்பின் வந்த அஸ்வின் வெங்கடராமன் 45 ரன்களும், பிரசாந்த் ராஜேஷ் 29 ரன்களும் அடிக்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News