செய்திகள்

லார்ட்ஸ் டெஸ்ட்- மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்

Published On 2018-08-09 15:27 IST   |   Update On 2018-08-09 15:27:00 IST
இங்கிலாந்து - இந்தியா இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட் மழைக் காரணமாக காலதாமதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 31 ரன்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்கான டாஸ் 3 மணிக்கு சுண்டப்படும். ஆனால் லார்ட்ஸில் லேசான மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியில் இளம் வீரரான போப் அறிமுகமாகிறார். இந்திய அணியில் இடம் பெறும் 11 வீரர்கள் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
Tags:    

Similar News