செய்திகள்

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் 2வது முறையாக வெள்ளி வென்று பி.வி.சிந்து சாதனை

Published On 2018-08-05 10:36 GMT   |   Update On 2018-08-05 10:36 GMT
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டு முறை வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்ற சாதனையை இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனதாக்கி கொண்டார். #PVSindhu
சீனாவின் நான்ஜிங் நகரில்  24–வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.

இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் மற்றும் இந்தியாவின் பி வி சிந்து ஆகியோர் மோதினர்.

இதில் கரோலினா மரின்  21-19, 21-10 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் தோற்றாலும் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் பிவி சிந்து.

பிவி சிந்து கடந்த ஆண்டும் (2017) இறுதிப் போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை பிவி சிந்து பதிவு செய்துள்ளார். 
Tags:    

Similar News