செய்திகள்

தேசிய ரேங்கிங் பேட்மின்டன்- சென்னை வீரர் சங்கர் சாம்பியன்

Published On 2018-07-31 07:09 GMT   |   Update On 2018-07-31 07:09 GMT
15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேங்கிங் பேட்மின்டன் போட்டியில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். #sankarmuthusamy #badminton #champion
சென்னை:

15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேங்கிங் பேட்மின்டன் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-11 என்ற நேர்செட்டுகளில் முதல்நிலை வீரரான பிரணவ் ராவ் காந்தமை (தெலுங்கானா) தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

தேசிய ரேங்கிங் போட்டியில் சங்கர் 3-வது முறையாக தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஆசிய போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார். சங்கர் முகப்பேரில் உள்ள பயர்பால் அகாடமியில் பயிற்ச்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார். #sankarmuthusamy #badminton #champion
Tags:    

Similar News