செய்திகள்

முதல் ஒருநாள் கிரிக்கெட்- ரபாடா, ஷம்சி பந்து வீச்சால் 193 ரன்னில் சுருண்டது இலங்கை

Published On 2018-07-29 08:52 GMT   |   Update On 2018-07-29 08:52 GMT
முதல் ஒருநாள் போட்டியில் ரபாடா மற்றும் ஷம்சி ஆகியோரின் அபார பந்து வீச்சால் இலங்கை அணி 193 ரன்னில் ஆல்அவுட் ஆனது. #SLvSA #Rabada
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, உபுல் தரங்காக ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினார்கள். டிக்வெல்லா 2 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். தரங்கா 10 ரன்னில் ரன்அவுட் ஆனார்.


குசால் பேரேரா

அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 3 ரன்னில் ரபாடா பந்தில் வெளியேறினார். 4-வது வீரராக களம் இறங்கிய குசால் பேரேரா தாக்குப்பிடித்து விளையாட, கேப்டன் மேத்யூஸ் 5 ரன்னிலும், ஜெயசூர்யா ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 36 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.

6-வது விக்கெட்டுக்கு குசால் பெரேராவுடன், ஆல்ரவுண்டர் திசார பெரேரா ஜோடி ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. குசால் பெரேரா 81 ரன்களும், திசாரா பெரேரா 49 ரன்களும் எடுக்க இலங்கை அணி 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 193 ரன்னில் சுருண்டது.



ரபாடா 8 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், ஷம்சி 8.3 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது. இந்த அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
Tags:    

Similar News