செய்திகள்

டி10 கிரிக்கெட் லீக்கில் ரஷித் கான், அந்த்ரே ரஸல், மெக்கல்லம் விளையாடுகிறார்கள்

Published On 2018-07-24 10:04 GMT   |   Update On 2018-07-24 10:04 GMT
துபாயில் நடத்தப்பட இருக்கும் 10 ஓவர் லீக் தொடரில் ரஷித் கான், அந்த்ரே ரஸல், மெக்கல்லம் போன்ற முன்னணி வீரர்கள் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர். #RashidKhan
சர்வதேச அளவில் பல்வேறு டி20 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக துபாயில் கடந்த ஆண்டு 10 ஓவர் லீக் தொடர் (டி20) நடைபெற்றது. இதில் நான்கு அணிகள் கலந்து கொண்டது. இந்த ஆண்டும் 10 ஓவர் லீக் தொடர் வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிறது.

இதில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களான ரஷித் கான், அந்த்ரே ரஸில் பங்கேற்கிறார்கள்.



ரஷித்கான் மாரத்தா அரேபியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். முஜீப் உர் ரஹ்மானை பெங்கால் டைகர்ஸ் அணி எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது ஷேசாத்தை புதிய அணியான கிறிஸ்டெனட் ராஜ்புத்ஸ் அணியும், அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங்கை கேரளா கிங்ஸ் அணியும் ஏலம் எடுத்துள்ளது.

பஞ்சாபி லிஜெண்ட்ஸ் சோயிப் மாலிக்கை தக்கவைத்துள்ளது. ஷாகித் அப்ரிடியை பாக்த்டூன்ஸ் எடுத்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் மோர்கனை கேரளா கிங்ஸ் அணியும், வெஸ்ட் இண்டீசின் டேரன் சமியை நார்தன் வாரியர்ஸ் அணியும் எடுத்துள்ளது. ஷேன் வாட்சனை கராச்சியன்ஸ் அணி எடுத்துள்ளது. மற்ற வீரர்களுக்கான ஏலம் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News