செய்திகள்

முதல் ஒருநாள் கிரிக்கெட்- ஜிம்பாப்வேயை 201 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

Published On 2018-07-13 14:34 GMT   |   Update On 2018-07-13 14:34 GMT
முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை 107-ல் சுருட்டி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ZIMvPAK
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் புலவாயோவில் இன்று தொடங்கியது. ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 128 ரன்களும், பகர் சமான் 60 ரன்களும், ஆசிப் அலி 46 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் சிபாபா 20 ரன்னும், முசாகண்டா 21 ரன்னும், விக்கெட் கீப்பர் முர்ரே அவுட்டாகாமல் 32 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஜிம்பாப்வே அணி 35 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்னில் சுருண்டது.



இனால் 201 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் 4 விக்கெட்டும், உஸ்மான் கான், பஹீம் அஷ்ரப் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஆட்டம் 16-ந்தேதி நடக்கிறது.
Tags:    

Similar News