search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "zimbabwe vs pakistan"

    முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை 107-ல் சுருட்டி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ZIMvPAK
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் புலவாயோவில் இன்று தொடங்கியது. ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 128 ரன்களும், பகர் சமான் 60 ரன்களும், ஆசிப் அலி 46 ரன்களும் அடித்தனர்.

    பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் சிபாபா 20 ரன்னும், முசாகண்டா 21 ரன்னும், விக்கெட் கீப்பர் முர்ரே அவுட்டாகாமல் 32 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஜிம்பாப்வே அணி 35 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்னில் சுருண்டது.



    இனால் 201 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் 4 விக்கெட்டும், உஸ்மான் கான், பஹீம் அஷ்ரப் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஆட்டம் 16-ந்தேதி நடக்கிறது.
    ஹராரேயில் இருந்து புலவாயோ செல்ல இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயணம் பணப் பிரச்சனையால் தள்ளிப் போகியுள்ளது. #ZIMvPAK
    ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேயில் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 1-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த தொடருக்குப்பின் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற வெள்ளிகிழமை (13-ந்தேதி) தொடங்குகிறது. இந்த ஐந்து போட்டிகளும் புலுவாயோ-வில நடக்கிறது.

    இதற்காக பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஹராரேயில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. ஆனால், பணப் பிரச்சனை காரணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் வீரர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலுக்கு முன்பணம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.



    இதனால் நட்சத்திர ஓட்டல் பாகிஸ்தான் வீரர்களுக்கு தங்கும் அறை ஒதுக்கவில்லை. ஆகவே பாகிஸ்தான் வீரர்கள் புலவாயோ புறப்பட்டுச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஒருவேளை பணப் பிரச்சனை தீர்ந்துவிட்டால், பாகிஸ்தான் அணி நாளை காலை புலவாயோ சென்று, அதன்பின் மாலையில் பயிற்சியை மேற்கொள்ளும். ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 13-ந்தேதி முதல் ஜூலை 22-ந்தேதி வரை நடக்கிறது.
    ×