செய்திகள்

டிரினிடாட் டெஸ்ட் - இறுதி நாளில் 277 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெறுமா?

Published On 2018-06-09 22:29 GMT   |   Update On 2018-06-09 22:37 GMT
போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 277 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #WIvSL #FirstTest
போர்ட் ஆப் ஸ்பெயின்:
 
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். தனது முதல் இன்னிங்சில் 
154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.



தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 72 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இலங்கை அணி வெற்றி பெற 453 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. குசால் மெண்டிஸ் 94 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இன்னும் ஒரு நாள் மீதமுள்ள நிலையில், கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள இலங்கை 277 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா? அல்லது 7 விக்கெட்டுகளை எடுப்பதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறுமா? என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #WIvSL #FirstTest
Tags:    

Similar News