செய்திகள்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செரீனா, டெல்போட்ரோ 2-வது சுற்றுக்கு தகுதி- இந்திய வீரர் யூகிபாம்ரி தோல்வி

Published On 2018-05-30 05:09 GMT   |   Update On 2018-05-30 05:09 GMT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் செரீனா, டெல்போட்ரோ வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இந்திய வீரர் யூகிபாம்ரி தோல்வி அடைந்து வெளியேறினார். #FrenchOpen #Serena #delPotro
பாரீஸ்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் 5-ம் நிலை வீரரான டெல்போட்ரோ (அர்ஜென்டினா) முதல் சுற்றில் நிகோலசை (பிரான்ஸ்) எதிர் கொண்டார். இதில் டெல் போட்ரோ 1-6, 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), 3-ம் நிலை வீரர் சிலிச் (குரோஷியா) 9-ம் நிலை வீரர் இஸ்னெர் (அமெரிக்கா), 6-வது இருக்கும் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

28-ம் நிலை வீராங்கணையான ‌ஷரபோவா (ரஷியா) தொடக்க ஆட்டத்தில் ஹோகன் காம்பை (நெதர்லாந்து) எதிர் கொண்டார். இதில் ‌ஷரபோவா 6-1, 4-6, 6-3 என்ற கணக்கில் வென்றார்.

மற்ற ஆட்டங்களில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), 3-வது வரிசையில் இருக்கும் முகுருஜா (ஸ்பெயின்) கரோலின் கார்சியா (நெதர்லாந்து) ஆகியோர் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

இந்திய வீரர் யூகிபாம்ரி தொடக்க சுற்றிலேயே தோற்று வெளியேறினார். அவர் 4-6, 4-6, 1-6 என்ற கணக்கில் பெல்ஜியத்தை சேர்ந்த ரூபன் வெமெல்மேனசிடம் தோற்றார்.



இதேபோல் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபன்னா- வாஸ்லின் (நெதர்லாந்து) ஜோடி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது. #FrenchOpen #Serena #delPotro
Tags:    

Similar News