செய்திகள்
மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் வாழ்நாள் தடை பெற்ற உலகக்கோப்பை தொடர் நடுவர்
ரஷியாவில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடுவராக பணிபுரிய இருந்த நடுவர், மேட்ச் பிக்சிங்கில் வாழ்நாள் தடைபெற்றார். #Worldcup2018
ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. இதில் நடுவராக பணிபுரிய பிபாவால் சவுதி அரேபியாவின் பஹத் அல் மிர்தாசி (வயது 32) தேர்வு செய்யப்பட்டார்.
சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை கிங்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் அல்-இட்டிஹாத் - அல்-பைசாலி அணிகள் மோதின. இந்த போட்டிக்கு மிர்தாசி நடுவராக இருந்தார்.
அப்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சவுதி அரேபியா கால்பந்து பெடரேசன் அவருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது.
இதனால் உலகக்கோப்பைக்கான நடுவர்கள் பட்டியில் இருந்து அவரை நீக்குமாறு பிபாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை கிங்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் அல்-இட்டிஹாத் - அல்-பைசாலி அணிகள் மோதின. இந்த போட்டிக்கு மிர்தாசி நடுவராக இருந்தார்.
அப்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சவுதி அரேபியா கால்பந்து பெடரேசன் அவருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது.
இதனால் உலகக்கோப்பைக்கான நடுவர்கள் பட்டியில் இருந்து அவரை நீக்குமாறு பிபாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.