செய்திகள்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் விலகல்

Published On 2018-05-10 02:44 IST   |   Update On 2018-05-10 02:44:00 IST
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகி இருக்கிறார். #Italian Open #SerenaWilliams
ரோம்:

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகி இருக்கிறார். இந்த தகவலை போட்டி அமைப்பு குழுவினர் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

36 வயதான செரீனா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெண் குழந்தை பெற்ற பிறகு கடந்த மார்ச் மாதம் மீண்டும் களம் திரும்பினார். அந்த மாதத்தில் நடந்த இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நோகி ஒசாகாவிடம் தோல்வி கண்ட செரீனா வில்லியம்ஸ் அதன் பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் போட்டியில் இருந்து விலகிய செரீனா வில்லியம்ஸ், இத்தாலி ஓபன் போட்டியில் இருந்தும் விலகி இருப்பதால் அவர் வருகிற 27-ந் தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #Italian Open #SerenaWilliams 
Tags:    

Similar News