செய்திகள்

போதையில் தகாத வார்த்தைகளை வீசிய ஓ'கீபேவுக்கு 15 ஆயிரம் டாலர் அபராதம்

Published On 2017-04-07 11:12 GMT   |   Update On 2017-04-07 11:12 GMT
புனே டெஸ்டில் இந்தியாவை தோற்கடிக்க முக்கிய காரணமாக இருந்த ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபேவுக்கு போதையில் திட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே. 32 வயதான இவர் புனே போட்டியில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தார். விளையாட்டில் சிறப்பாக செயல்படும் இவர், கிரிக்கெட்டிற்கு வெளியே ஒழுக்கத்துடன் நடமாடியது கிடையாது.

கடந்த வருடம் சிட்னி ஓட்டலில் கடும்போதையில் தகராறு செய்து பிரச்சினையில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில் தற்போது 2-வது முறையாக குடிபோதையில் தகாத வார்த்தைகளைப் பேசி சிக்கியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 15 ஆயிரம் டாலர்கள் அபராதமாக விதித்துள்ளது.

மேலும், இந்த செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறிய கிரிக்கெட் வாரியம், அவரை கவுன்சிலிங் செல்லும்படி உத்தரவிட்டுள்ளது.

Similar News