செய்திகள்

ரொனால்டோவின் கடின உழைப்பு எனக்கு உத்வேகம் அளித்தது: விராட் கோலி

Published On 2017-01-01 16:23 GMT   |   Update On 2017-01-01 16:24 GMT
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடின உழைப்பினால் அதிக அளவில் உத்வேகம் அடைந்துள்ளேன் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறப்பவர் போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானா ரொனால்டோ. ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் அவர், கடின உழைப்பால் 31 வயதிலும் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தனது கடின முயற்சியால் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். தனது கடின உழைப்பிற்கு கிறிஸ்டியானோ ரொனோல்டோவின் கடின உழைப்புதான் உத்வேகம் கொடுத்தது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி மேலும் கூறுகையில் ‘‘நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடமிருந்து ஏராளமான வகையில் உத்வேகம் பெற்றுள்ளேன். கடின உழைப்பினால் அவர் பல வருடங்களாக முதல் இடத்தில் உள்ளார். உலகிலேயே மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர் (கடின பயிற்சி) ரொனால்டோதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் அவர் அந்த இடத்தில் இருக்கிறார். மெஸ்சி ஒரு சிறந்த மேதை. ஆனால், கடின உழைப்பில் ரொனால்டோ அவரை விடச் சிறந்தவர்.’’ என்றார்.

Similar News