செய்திகள்

பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட்: டாக்கா அணி சாம்பியன்

Published On 2016-12-10 06:05 GMT   |   Update On 2016-12-10 08:28 GMT
பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜ்ஷாஹி அணியுடனான ஆட்டத்தில் டாக்கா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
டாக்கா அணி சாம்பியன்

வங்காளதேசம் கிரிக்கெட் வாரியம் சார்பில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்தது. 7 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இறுதிப் போட்டிக்கு ‌ஷகிப் - அல்-ஹசன் தலைமையிலான டாக்கா டைனமைட்ஸ் அணியும், டேரன் சமி தலைமையிலான ராஜ்ஷாஹி கிங்ஸ் அணியும் மோதின.

முடிவில் பேட்டிங் செய்த டாக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்தது. லீவிஸ் 45 ரன்னும், சங்ககரா 36 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய ராஜ்ஷாஹி அணி 17.4 ஓவரில் 103 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் டாக்கா அணி 56 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Similar News