செய்திகள்
நேற்று ஒரே நாளில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சிந்து
நேற்று ஒரே நாளில் இந்தியாவின் மொத்த கவனத்தையும் சிந்து ஈர்த்து விட்டார்.
பி.வி.சிந்து விளையாடும் இறுதிப் போட்டியை காண அனைவரும் எதிர் நோக்கி இருந்தனர். ஆனால் போட்டி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது.
போட்டி எப்போது ஆரம்பிக்கும் என்று அனைவரும் காத்து இருந்தனர். போட்டி தொடங்கியதும் டி.வி. முன்பு அமர்ந்து சிந்து ஆட்டத்தை பரபரப்புடன் பார்த்தனர். நேற்று இந்தியாவின் மொத்த கவனத்தையும் சிந்து ஒரு ஆளாக ஈர்த்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சிந்து மீது எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றார்போல் அவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.