செய்திகள்
தீபா கர்மாகருக்கு பயிற்சியாளர் விதிக்கும் கட்டுப்பாடுகள்
தீபா கர்மாகருக்கு அவரது பயிற்சியாளர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அவை என்னவென்று பார்க்கலாம்.
ரியோ டி ஜெனீரோ :
சாதனை மங்கை தீபா கர்மாகரின் பயிற்சியாளர் புவனேஷ்வர் நந்தி நேற்று அளித்த பேட்டியில், ‘தீபா கர்மாகரின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக அவர் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளேன். அவரது செல்போனில் இருந்து சிம்கார்டை எடுத்து விட்டேன். அவரது பெற்றோர் என் மூலம் மட்டுமே அவரிடம் பேச முடியும். தீபாவுக்கு நாளை (அதாவது இன்று) பிறந்த நாளாகும். பிறந்த நாள் வாழ்த்தை பெற்றோர் சொல்வதற்கு வசதியாக சிறிது நேரம் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளேன்.
அவருக்கு பெரிய அளவில் தோழிகள் வட்டாரம் கிடையாது. அதனால் தோழிகளுடன் பிறந்த நாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருக்காது. அவருக்குரிய இறுதிப்போட்டி ஆகஸ்டு 14-ந்தேதி என்றாலும் இந்திய நேரப்படி அது 15-ந்தேதி தேதியாகும். அன்றைய தினம் நாட்டின் சுதந்திர தினமாகும். எனவே அந்த நாளில் அவர் பதக்கம் வென்றால், தேசத்தின் சுதந்திர தின பரிசாக அது அமையும்’ என்றார்.
சாதனை மங்கை தீபா கர்மாகரின் பயிற்சியாளர் புவனேஷ்வர் நந்தி நேற்று அளித்த பேட்டியில், ‘தீபா கர்மாகரின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக அவர் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளேன். அவரது செல்போனில் இருந்து சிம்கார்டை எடுத்து விட்டேன். அவரது பெற்றோர் என் மூலம் மட்டுமே அவரிடம் பேச முடியும். தீபாவுக்கு நாளை (அதாவது இன்று) பிறந்த நாளாகும். பிறந்த நாள் வாழ்த்தை பெற்றோர் சொல்வதற்கு வசதியாக சிறிது நேரம் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளேன்.
அவருக்கு பெரிய அளவில் தோழிகள் வட்டாரம் கிடையாது. அதனால் தோழிகளுடன் பிறந்த நாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருக்காது. அவருக்குரிய இறுதிப்போட்டி ஆகஸ்டு 14-ந்தேதி என்றாலும் இந்திய நேரப்படி அது 15-ந்தேதி தேதியாகும். அன்றைய தினம் நாட்டின் சுதந்திர தினமாகும். எனவே அந்த நாளில் அவர் பதக்கம் வென்றால், தேசத்தின் சுதந்திர தின பரிசாக அது அமையும்’ என்றார்.