செய்திகள்

போபண்ணாவுடன் தங்க மறுக்கவில்லை: லியாண்டர் பெயஸ்

Published On 2016-08-06 14:39 IST   |   Update On 2016-08-06 14:40:00 IST
ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் ஒரே அறையில் போபண்ணாவுடன் தங்க மறுத்ததாக வந்த தகவலை லியாண்டர் பெயஸ் மறுத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- ரோகன் போபண்ணா ஜோடி விளையாடுகிறது. முதலில் லியாண்டருடன் ஜோடி சேர போபண்ணா விரும்பவில்லை. அதன்பின் இந்திய டென்னிஸ் சங்கம் அவரை சமாதானப்படுத்தியது.

இந்த நிலையில் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் ஒரே அறையில் போபண்ணாவுடன் தங்க லியாண்டர் பெயஸ் மறுத்ததாக வெளியானது. இதை லியாண்டர் பெயஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறுகையில், போபண்ணாவுடன் நான் தங்க மறுத்ததாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் இப்படி ப்பட்ட தகவலால் வருத்தமடைந்தேன்.

Similar News