சிறப்புக் கட்டுரைகள்
null

ஆரோக்கியம் தரும் முத்திரைகள்

Published On 2024-08-23 16:29 IST   |   Update On 2024-08-23 16:30:00 IST
  • விகிதாசாரம் மாற்றம் பெரும்போது உடலில் நோய் உருவாகிறது.
  • உடலில் உருவாகும் நோய்களுக்கு உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம்.

மனிதர்களுடைய உடலில் உள்ள காந்த சக்தியை உயிர் ஆற்றலாக வெளிக்கொண்டு வந்து நோய் தீர்க்கும் ஒரு கலையை தான் யோகத்தில் முத்திரைகள் என்கிறோம். இந்த யோகம் முத்திரைகள் நம்முடைய உடலில் உள் உறுப்புகளை ஆளுமை செய்து பயிற்சிகள் மூலம், ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்வதுடன் வராமலும் தடுக்க பயன்படுகிறது.

இறைவனால் படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டது. அதுபோல நம்முடைய உடலும் பஞ்சபூதங்களின் கலவை ஆகும். இந்த முத்திரை கலையில் பஞ்சபூதங்கள் என்பது நமது கை விரல்களில், நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம், நீர் என்று ஐந்து பஞ்சபூத தத்துவங்களாக வேலை செய்கிறது.

1. நெருப்பு என்பது கட்டை விரல்

2. காற்று என்பது ஆள்காட்டி விரல்

3. ஆகாயம் என்பது நடுவிரல்

4. நிலம் என்பது மோதிர விரல்

5. நீர் என்பது சிறுவிரல்

கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

ஒரு மனிதருடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், இந்த பஞ்சபூதங்களும் சமநிலையில் இறை தத்துவ விகிதாசாரப்படி இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியமாக சிறந்து விளங்கும். இந்த விகிதாசாரம் மாற்றம் பெரும்போது உடலில் நோய் உருவாகிறது. எனவே இந்தப் பஞ்சபூதங்களை நாம் யோக முத்திரை கலையின் மூலம் இயக்கும்போது உடல் உறுப்புகள் அதன் செயல்பாடுகள், அதில் உள்ள ஓட்டங்கள் சீரமைக்கப்படும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறும்.

மேலும் வாதம், பித்தம், கபம் என்று கூறும் முக்குற்றங்கள் அதிகமானாலும் குறைந்தாலும் உடலில் நோய் உண்டாகும். நம்முடைய வாழும் இடத்தின் தன்மைக்கு ஏற்பவும், காலநிலை மாற்றத்தினாலும் நோய் வர வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இந்த முத்திரை செய்பவர்களுக்கு உணவு கட்டுப்பாடு என்பது இல்லை. ஆனால் உடலில் உருவாகும் நோய்களுக்கு உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். பொதுவாக இந்த முத்திரைகளை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஆரம்பித்து இரவு வரை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். முத்திரைகளை குறைந்தது 5 நிமிடம் முதல் அதிகபட்சம் 20 நிமிடம் வரை செய்யலாம்.

முத்திரைகள் செய்யும்போது மனம் அதனோடு இணைந்து செய்தால் பலன் உடனடியாக கிடைக்கும். அந்த வகையில் சில அடிப்படை முத்திரைகள் எப்படி செய்வது மற்றும் அதன் பயன்களை பற்றி விரிவாக பார்ப்போம். முத்திரைகள் செய்யும்போது உணவுக்கு முன் செய்யலாம் அல்லது உணவிக்கு பிறகு 30 நிமிடம் கழித்து செய்யலாம். கருவுற்றிருக்கும் பெண்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தக்க ஆலோசனை செய்த பிறகு தான் செய்ய வேண்டும்.

1. சின்முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டைவிரல் மற்றும் ஆள் காட்டி விரல் இரண்டையும் நுனியில் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நேராக கீழ்நோக்கி இருக்க வேண்டும்.


பயன்கள்: மன அமைதி பெறும், மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், ஞாபக சக்தி அதிகரிக்கும், தலைவலி, தூக்கமின்மை விலகும், கோபம் தவிர்க்கப்படும், வாயில் ஏற்படும் புண்கள் விலகும்.

2. வாயு முத்திரை:

கட்டை விரலின் அடிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி அதற்கு மேல் கட்டை விரலால் லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

பயன்கள்: உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும், வாயு பிடிப்பு சரியாகும், புத்தி கூர்மை அதிக மாகும், உடல் வலி பறந்து போகும், நடையில் ஏற்படும் தடுமாற்றத்தை குறைக்கும், ஜீரண மண்டலம் சரியாக வேலை செய்யும், தேவையற்ற கழிவுகள் வெளியே செல்லும்.


3. சூனிய முத்திரை:

கட்டை விரலின் அடிப்ப குதியில் நடுவி ரலை வைத்து, கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்கள் நேராக இருக்க வேண்டும்.



பயன்கள்: கழுத்து வலி சரியாகும், தைராய்டு பிரச்சனைகள் விலகும், எலும்புகளுக்கு பலம் கூடும், இதய பிரச்சனைகள் தீரும், பல் வலி சரியாகும், தலை சுற்றல் விலகும், காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.

4. பிருதிவி முத்திரை:


கட்டை விரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாக இரண்டும் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

பயன்கள்: தசை பிடிப்பு, சுளுக்கு நீங்கும், மூளை செல்கள் ஆயுளை அதிகரிக்கும், உடலுக்கு சத்துக்கள் அதிகமாக கிடைக்கும், உடல் உறுப்புகளுக்கு பலத்தை கொடுக்கும்.

5. சூரிய முத்திரை:

கட்டைவிரலின் அடிப்பகுதியில் மோதிர விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நேராக இருக்க வேண்டும்.


பயன்கள்: இருமல் சரியாகும், வயிற்றுப் பிரச்சனைகள் சரியாகும், உடலின் எடை குறைக்க உதவும், உடலின் வெப்பத்தை கூட்டும், சீரன மண்டலம் சரியாக வேலை செய்யும், பிராண சக்தி சீராக இருக்கும்.

6. வருண முத்திரை:

கட்டை விரலின் நுனியும், சுண்டு விரல் நுனியும் தொட்டு க்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.


பயன்கள்: நீர் சத்துக் கூடும், நல்ல உறக்கம் வரும், பல் வலி சரியாகும், ரத்தத்தை சுத்தம் செய்யும், முகப்பரு சரியாகும், தோல் வறட்சி விலகும், தோல் வியாதிகள் குறையும்.

7. பிராண முத்திரை: சுண்டுவிரல், மோதிர விரல் இரண்டையும் கட்டவிரல் நுனியில் சேர்க்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.


பயன்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் சரியாகும், தூக்கமின்மையை போக்கும், உடல் ஆரோக்கியமாக இருக்கும், பசி கட்டுக்குள் வரும்.

8. அபான முத்திரை:

நடுவிரல், மோதிர விரல் இரண்டையும் மடக்கி கட்ட விரல் நுனியை தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.


பயன்கள்: தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும், வாயு பிடிப்பு, வாயு தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும், மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும், மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.

9. அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் மற்றும் கட்டைவிரல் நுனிகள் சேர்ந்து இருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்ட விரலின் அடிப்பாகத்தில் தொட வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்க வேண்டும்.


பயன்கள்:

ரத்த ஓட்டம் சரியாகும், பக்கவாதத்தை சரி செய்யும், மாரடைப்பு வராது, அடைப்புகளை சரி செய்யும், இதய துடிப்பு சீராக இருக்கும், சளி, இருமல் நீங்கும், காய்ச்சலை சரி செய்யும்.

10. லிங்க முத்திரை:


இரண்டு கை விரல்களை கோர்த்து, கட்டை விரலை லிங்கம் போல் உயர்த்தி வைக்க வேண்டும். படத்தில் உள்ளதை கவனிக்கவும். (ஆண்கள் வலது கை கட்டை விரலையும், பெண்கள் இடது கை கட்டை விரலையும் உயர்த்த வேண்டும்) பயன்கள்:

கபத்தை போக்கும், கெட்ட கொழுப்பை கரைக்கும், வறட்டு இருமலை சரி செய்யும், தொப்பையை குறைக்கும், அதிக சூட்டை சரி செய்யும், ஆஸ்துமா சரியாகும்.

மூச்சுப் பயிற்சி மற்றும் ஆசனங்கள் மட்டுமின்றி முத்திரைகளும் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

போன்: 9444234348

Tags:    

Similar News