null
- சனிப்பிரதோஷம் சிவராத்திரிக்கு முன் வந்தால் சனி மகா பிரதோஷம் ஆகும்.
- பிரதோஷ கால விரதம் தொடங்குவோர் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது மகா உத்தமம்.
"பிரதோஷம்" என்பது வடமொழிச் சொல்லாகும். "ப்ர" என்றால் விரிந்த, பெரிய என்றும், "தோஷம்" என்றால் பாவம், துன்பம் என்றும், "பிரதோஷம்" என்றால் விரிந்த பாவம், பெரிய துன்பம் என்றும், "பிரதோஷ காலம்" என்றால் விரிந்த பாவகாலம், பெரிய துன்பகாலம் என்றும் சொல்லப்படுகிறது.
பிரதோஷ காலத்தில் சிவ வழிபாடு செய்தால் துன்பத் தைப்போக்கி இன்பம் பெறலாம். தோஷம் என்றால் "குற்றம்" என்றும், பிரதோஷம் என்றால் குற்றம் என்பதின் எதிர்ச்சொல்லாக "குற்றம் இல்லாதது" என்றும் கூறுவர். எனவே, குற்றமற்ற இக்காலத்தில் இறைவனாம் சிவனை வணங்கி வழிபாடு செய்தால் குற்றங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல, பிரதோஷ காலம் என்பது ஆன்மாக்களின் முற்பிறப்பு குற்றங்கள் நீங்கி மனம் ஈஸ்வரனிடத்தில் ஒடுங்குவதற்கு உகந்த காலம் ஆகும். அதனால்தான் பெரியோர்கள் "பிரதோஷ காலம் என்றாலே துன்பங்களைப்போக்கி இன்பங்களை அளிக்கும் புனிதமான காலம்" என்று கூறுகிறார்கள்.
சூரியன் மறைவதற்கு முன் உள்ள கடைசி மூன்றே முக்கால் நாழிகையும்+சூரியன் மறைந்த பின் உள்ள முதல் மூன்றே முக்கால் நாழிகையும் சேர்ந்த கூட்டு நேரமே பிரதோஷ காலத்தின் மொத்த நேரமாகும். ஒரு நாழிகை நேரம் என்பது 24 நிமிடம்.
அதாவது, மாலை 04 மணி 30 நிமிடம் முதல் இரவு 07 மணி 30 நிமிடம் வரையுள்ள மூன்று மணி (ஏழு நாளிகை) நேரமும் பிரதோஷ காலமே. என்றாலும், பிரதோஷ கால வழிபாடு செய்வதற்கு மிகவும் சரியான நேரம் என்பது இவைகளின் மைய நேரமாகிய மாலை 05 மணி 15 நிமிடம் முதல் இரவு 06 மணி 45 நிமிடம் வரையுள்ள ஒன்னரை மணி (மூன்றே முக்கால் நாழிகை) நேரமே ஆகும். மூன்றே முக்கால் நாழிகை (ஒன்னரை மணி) நேரம் என்பது ஒரு முகூர்த்த கால அளவாகும்.
இந்தச் சரியான பிரதோஷ கால நேரம் என்பது அன்றைய தினம் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவை பொருத்து சற்று மாறுபடலாம்.
பிரதோஷங்கள் பல இருப்பினும் அவை அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் தான். இதற்கு பெரிய பிரதோஷம் என்றும் ஒரு பெயர் உண்டு.
தேவர்களைக் காக்க ஈசன் ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை அல்லவா? அத்துடன், தேவர்கள் தங்கள் தவறை உணர்ந்து ஈசனிடம் சரணம் அடைந்த போது சந்தியா நிருத்தம் என்னும் அற்புத நடனத்தை ஈசன் ஆடிய நாள் திரயோதசி திதி கூடிய மாலை நேரம் அல்லவா? ஆக, சனிக்கிழமையும், திரயோதசி திதி கூடிய நாளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் ஆகும். அப்போது நாம் செய்கின்ற வழிபாடே சனிப்பிரதோஷ கால வழிபாடு ஆகும். இந்த சனிப்பிரதோஷம் சிவராத்திரிக்கு முன் வந்தால் சனி மகா பிரதோஷம் ஆகும்.
சிவ பெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.
பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.
பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம்.
பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருக்க இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.
இரவும், பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத்காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே பேபால பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் அந்த நேரம் பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. நாளடைவில் அது பேச்சு வழக்கில் பிரதோஷ காலம் ஆகிவிட்டது.
பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.
சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வந்தால், ஈசுவரனிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.
பிரதோஷ நாட்களில் தவறாது விரதம் இருந்து வழி பட்டால் கடன், வறுமை, நோய், பயம், மரண வேதனை நீங்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்து.
பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.
பிரதோஷ கால விரதம் தொடங்குவோர் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது மகா உத்தமம்.
பிரதோஷ நேரத்தில் பெருமாள் கயிலாய மலையில் இருப்பதால், பிரதோஷ நேரத்தில் பெருமாள் கோவில்களில் திரை பேபாட்டு மூடி இருப்பார்கள்.
ஒவ்வொரு பிரதோஷத்திலும் வில்வஇலை அலங்காரம் செய்து பூஜித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும் போது எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம். அபிஷேகம் முடிந்த பின் அருகம்புல் பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது நமக்கு நன்மை தரும்.
உற்சவமூர்த்திக்கு பூஜையின் போது பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் இவற்றினைத் தரலாம். உற்சவ மூர்த்திக்கான பூஜையின் போது நமது அணிகலன்களை (நகைகளை) உற்சவமூர்த்திக்கு அணிவித்து தீபாராதனை முடிந்த பின்னர் நகையை அணிந்து கொண்டால் நன்மை பல நமக்கு கிடைக்கும்.
நந்திதேவரது தீபாராதனைக்குப் பிறகு மூலவருக்கு நடக்கும் தீபாராதனையை நந்தி தேவரது இரண்டு கொம்புகளுக்கு இடையே பார்த்தால் சகல தோஷமும், பாவமும் நீங்கும்.
மூலவரது தீபாராதனை முடிந்த பின்பு நந்திகேஸ்வரரது காதில் பிறர் கேட்காதவாறு நம்முடைய குறைகளையம், கோரிக்கைகளையும் அவரிடம் கூறுதல் வேண்டும். இவ்வாறு பன்னிரெண்டு பிரதோஷ காலங்கள் வரை கூறி வந்தால் நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும்.
நந்திகேஸ்வரருக்கு நைவேத்தியமாக பச்சரிசியுடன் வெல்லம் கலந்து வைத்து வழிபாட்டிற்குப் பிறகு எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதாலோ அல்லது கொடுப்பதை வாங்கி சாப்பிடுவதாலோ நமது தோஷங்கள் தொலையும்.
நந்திதேவர் மற்றும் உற்சவர், மூலவர் ஆகியோருக்கு தீபாராதனை செய்யும்போது இறைவனின் திருநாமங்களையும், சிவபுராணப் பாடல்களையும் பாடுதல் வேண்டும். இவ்வாறு பக்தியுடன் பாடுவதால் தோஷம், பாவம், கஷ்டம் நீங்கி நன்மை பல பெபறலாம்.
முக்கியமாக பிரதோஷ நாளன்று உபவாசம் இருந்து கடவுளை வழிபட வேண்டும். தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம் அருந்தி வெறும் தரையில் படுத்து உறங்கினால் பிரதோஷத்திற்கான முழு பலன் கிட்டும்.
பிரதோஷ காலத்தில் சிவாலயம் சென்று, பிரதோஷ கால வழிபாட்டில் கலந்து கொண்டு முறையாகச் சிவனை வழிபாடு செய்தால் பதினைந்து நாட்கள் சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து முறை பிரதோஷ கால வழிபாட்டில் சிவனை வணங்கி வழிபாடு செய்தால் ஓர் ஆண்டுக்காலம் சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும்.
தொடர்ந்து பன்னிரண்டு முறை பிரதோஷ கால வழிபாட்டில் கலந்து கொண்டு முறையாக சிவனைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்தால் ஒரு கும்பாபிஷேகம் கண்ட பலன் கிடைக்கும். அத்துடன் மனம் வலிமை பெபறும் சந்தோஷம் கூடும். தொடர்ந்த பன்னிரண்டு ஆண்டு காலம் தவறாமல் பிரதோஷம் கால வழிபாட்டில் கலந்து கொண்டு முறயைாகச் சிவனைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்தால் பாவங்கள் தொலைந்து, துன்பங்கள் அகன்று, கடன்கள் தீர்ந்து, தீராத நோய்கள் விலகும் அதோடு, செல்வங்கள் பெருகும், மக்கட்ேபறு கிட்டும். எல்லாவகையான நன்மைகளும் ஏற்படும் இன்பமான வாழ்வு அமையும். அத்துடன் 'முக்தி' என்கின்ற மீண்டும் இவ்வுலகில் பிறவாத நிலையாகிய பேரின்பப் பெபருவாழ்வு அமையும்.
ராமபிரானின் மகன்களான குசன் லவன் ஆகியோர் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பிரதோஷ வழிபாடு செய்து 'முக்தி' பெபற்றனர் என்கிறது புராணம்
திரயோதசி திதியுடன் 'திரு ஆதிரை' நட்சத்திரம் கூடிய நாளில் வரும் பிரதோஷத்திற்கு 'பாசாங்குலி' என்று பெபயர். சிவபெபருமானுக்கு திங்கட்கிழமையும், திருவாதிரை நட்சத்திரமும் உகந்ததாகும். இதனால் சிவபெபருமானுக்கு 'ஆதிரையான்' என்ற ஒரு பெபயரும் உண்டு.
மது, மங்கை, கொள்ளை, பெபாய் கூறுதல், இவற்றினால் பல்வேறான பாவங்கள், பாதகம் ஏற்படும். இந்த பாதகத்தை துடைத்து நன்னெறி அடைய சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று முழு உபவாசம் இருந்து பிரதோஷ நேரத்தில் வழிபடுதல் வேண்டும். சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயத்தில் வழிபாடுகள் செய்தால் ஒரு வருடம் ஆலயம் சென்று வழிபாடு செய்த பலனும் சனிப்பிரதோஷத்தன்று சிவாலயத்தில் இறைவழிபாடு செய்தால் ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும். பதினொன்று பிரதோஷம் பார்ப்பது ஒரு கும்பாபிஷேகம் கண்ட பலன் உண்டு. 120 பிரதோஷம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.