- காலை உடற்பயிற்சி, நடை பயிற்சி, யோகா இவை அனைத்துமே நன்மை பயப்பவைதான்.
- கண்களை அவ்வப்போது கைகளால் பொத்தி 10-20 நிமிடம் ஓய்வு கொடுப்பது அவசியமாகும்.
தூங்கி எழுந்த பிறகு சோர்வு இல்லாமல் இருப்பதற்கு உடல் நலமும், மன நலமும் நன்கு இருக்க வேண்டும் என்பதனை பார்த்தோம். இதனைப் பற்றி மருத்துவ ஆலோசனை கண்டிப்பாய் பெற வேண்டும். அதோடு நாமும் சில முறைகளை கடைபிடித்தால் காலையில் சோர்வினை தடுத்து விடலாம்.
அநேகருக்கு விழிப்பு வந்த பிறகு கூட சற்று இழுத்து போத்திக் கொண்டு கண்ணை மூடி சிறிது நேர குட்டித் தூக்கம் போட பிடிக்கும். அலாரம் அடித்தால் திரும்ப அதன் தலையில் ஓங்கி அடித்து விட்டு தூங்கும் போது அது சொர்க்கம் தான். எனவே கண் விழித்தவுடன் மின்னல் போல் படுக்கையில் இருந்து குதித்து ஓட வேண்டாம். இது ஒருவரை எளிதில் சோர்வாக்கி விடும். குட்டி தூக்கம் போட்டு எழும் பொழுது காலை சோர்வு மாறி சக்தியோடு இருக்கும். முடியுமா என்ற கேள்வி எழும். இப்படி முயற்சி செய்து பாருங்கள். ஒரு அலாரம் 90 நிமிடங்கள் எழ வேண்டிய நேரத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். அந்த அலாரம் அடித்தவுடன் அதனை நிறுத்தி தூங்கி விடுங்கள். மற்றொரு அலாரம் 90 நிமிடம் கழித்த நன்றாக இருக்கட்டும். இதில் நீங்கள் சுறு சுறுப்புடன் எழுந்து செயல்படுவீர்கள்.
எழுந்தவுடன் சுறுசுறுப்பிற்காக காபியினை வயிற்றில் கொட்டாதீர்கள். எழுந்தவுடன் ஒரு கிளாஸ் நீர் அருந்துங்கள். சோர்வு உடலில் நீர் சத்து குறைவதன் காரணமாகவும் இருக்கலாம். ஆக காலையில் நீர், இளநீர், கேபின் இல்லாத பானங்கள் இவற்றின் மூலம் நீர் சத்தினை உடலில் கூட்டிக் கொள்ளலாம்.
யோகா பயிற்சி மிக அவசியம். இதன் மூலம் தசைகளை ஒட்டி இதை செய்ய முடியும். காலையில் 20 நிமிடங்கள் யோகா செய்பவர்களின் உடல் சக்தியும், மூளையின் செயல்பாட்டுத் திறனும் நன்கு கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
காலையில் எழுந்து பல் தேய்த்தவுடன் முகத்தினை சாதாரண நீரில் நன்கு அடித்து கழுவுங்கள். இதுவே உடலில் சுறுசுறுப்பினை கூட்டும். எழுந்தவுடன் 'ஷவர்' குளியல் என்பது உடலினை நல்ல சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் வைக்கும். சில உடல் உபாதைகள் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று மேற்கொள்ளலாம்.
காலை உணவினை தவிர்ப்பது உடலின் சக்தியினை வெகுவாய் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. உணவு எரிசக்தி தருகின்றது. முழு தானியம், புரதம், கொட்டை வகைகள் அதிக இனிப்பு இல்லாத பழங்களை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாமே.
நேரான சர்க்கரை, இனிப்பு மிகுந்த உணவுகள், அதிகம் சர்க்கரை சேர்த்த காபி போன்ற பானங்களைத் தவிர்த்து ஆப்பிள், காரட், ஆரஞ்சு போன்றவற்றினையும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
காபியினை குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். பீப்பாய் போன்ற பெரிய டம்ளரில் காபி வேண்டாம். அடிக்கடி அருந்துவதும் வேண்டாம்.
வீட்டிற்குள்ளேயே இருந்து காலை முதல் இரவு வரை சிலர் ஓயாது வேலை செய்வார்கள். வீட்டு கதவினைத் தாண்டி கூட வெளியே வர மாட்டார்கள். இவர்கள் காலப் போக்கில் மிகுந்த சோர்வுடனே இருப்பார்கள். வெளியில் இயற்கையோடு, செடி மரங்களோடு, காலை, மாலை என எப்போது வந்தாலும் உடலில் செரமேனின் அளவு கூடும். இது நல்ல தூக்கத்திற்கும், ஆரோக்கியமாக உண்ணுவதற்கும் பெரிதும் உதவும், காலை வேளைகளில் ஜன்னல், ஸ்கீரின் இவற்றினை திறந்து சூரிய ஒளி வீட்டினுள் படும்படியும் செய்து கொள்ளலாம்.
காலை உடற்பயிற்சி, நடை பயிற்சி, யோகா இவை அனைத்துமே நன்மை பயப்பவைதான்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் பார்த்தலை நிறுத்தி விட வேண்டும்.
தினமும் இரவு 9 மணி என்று நேரம் வரையறுத்தால் அதே நேரம் அன்றாடம் தூங்க செல்ல வேண்டும்.
தூங்கும் இடம் இரைச்சல் இல்லாமல், விளக்குகள் இல்லாமல் காற்றோட்டமாய் அமைதியாய் இருப்பது அவசியம்.
காலை எழுந்திருப்பதும் குறித்த நேரத்தில் எழ வேண்டும்.
மன நிம்மதி இல்லாதவர்கள் எப்போதுமே சோர்வுடனே இருப்பார்கள். அதற்கு என்ன முயற்சிகள் செய்து சரி செய்ய முடியுமோஅதனை உடனடியாக செய்து விடுங்கள்.
எண் சான் உடம்பு தானே, நன்கு கவனித்து விடுவோமே.
மேலும் சில குறிப்புகளை பார்ப்போமோ!
சிலர் எழுந்திருக்கும் போதே சோர்வுடன் எழுந்திருக்கின்றேன் என்று கூறுவார்கள்.
எழுந்திருக்கும் போதே தலைவலியும், வறண்ட தொண்டையும் இருப்பதாக சிலர் கூறுவர். இரவில் கொஞ்சம் குறட்டை ஏற்பட்டதன் காரணமாக இருக்கலாம். இந்த குறட்டை சற்று உறுமல் சத்தம் போல் இருக்கும். 4-5 சதவீதம் ஆண்களுக்கும், 2-3 சதவீதம் பெண்களுக்கும் 30-60 வயதில் ஏற்படலாம். மூக்கின் உள்பாதை சிறிதாகவோ, அடைப்பு இருந்தாலோ இவ்வாறு ஏற்படலாம்.
பொதுவில் குறட்டைக்கு பல காரணங்கள் உண்டு. சாதாரண சளி பாதிப்பு கூட காற்று பாதையில் தடுப்பு ஏற்படுத்தலாம். பொதுவில் இரவில் வெகு வெகுப்பான நீரில் தூங்கச் செல்வதற்கு முன் குளிப்பது வீக்கத்தினையும், சளி அதிகப்படுவதினையும் தடுக்க உதவும். இது பொதுவான முறை. ஆனால் ஒவ்வொருவரும் மருத்துவ ஆலோசனை பெற்றே எதனையும் பின்பற்ற வேண்டும். முதுகு கீழாக இருக்கும்படி படுப்பவர்கள் பக்கவாட்டில் படுக்கும் போது பாதிப்பு வெகுவாய் குறையும்.
அதிக எடை, ஹார்மோன் பிரச்சினைகள், அதிக குடி போன்றவைகளும் குறட்டை பாதிப்பிற்கு காரணமாகின்றன.
தூக்கத்தில் பல் கடித்தல், அதிக உஷ்ணம், அரவில் அதிக மசாலா உணவு, முறையான தூக்க மின்மை, இரவில் காபின் கலந்த பானங்கள், இரவில் நடப்பது, பேசுவது இவையும் காலை உங்களை எழுந்திருக்க முடியாமல் சோர்வாக்கி விடும்.
தூக்கமின்மை அல்லது ஆழ்ந்த உறக்கம் இன்மை:
இந்த வார்த்தைகளுக்கு மருத்துவ காரணம், மன நல காரணம் என பிரித்துக் கூறலாம். வாழ்வு மிக கடுமையான போராட்டமாக இருக்கும் பொழுது அது எந்த பிரிவிலும் இருக்கலாம். பொருளாதாரம், வேலை, படிப்பு, உடல் நலம், உறவுகள் என எவற்றில் வேண்டுமானாலும் பிரச்சினைகள் வரலாம். அவை மனிதனின் மன நலத்தினை பாதிக்கலாம். இதுவே தூக்கமின்மைக்கு மிக முக்கிய காரணம் ஆகின்றது. ஆகவே மன நல மருத்துவரின் உதவியும் ஒருவருக்கு மிக அவசியம். வெளிநாடுகளில் சர்வ சாதாரணமாய் மன நல மருத்துவரை அணுகி பலன் பெறுகின்றனர். அந்த நிலை இங்கும் வர வேண்டும்.
கண் பிரச்சினை: என்பது அநேகமாக பலருக்கும் ஒரு கால கட்டத்தில் ஏற்படுவது தான். வெள்ளெழுத்து கண்ணாடியானது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பயன்படுத்த வேண்டி இருக்கும். இருப்பினும் கண்களுக்கும் இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
தொடர்ந்து படிப்பது கம்யூட்டரில் வேலை செய்வது வெகு தூரம் வண்டி ஓட்டுவது அதுவும் இரவில் வெகு நேரம் வண்டி ஓட்டுவது போன்றவை கண்ணுக்கு அதிக உழைப்பாகின்றது. சோர்வாகின்றது. கண்களுக்கும் உடலின் மற்ற உறுப்புகளை போல ஓய்வு தேவைப்படுகின்றது. கண்களை அவ்வப்போது கைகளால் பொத்தி 10-20 நிமிடம் ஓய்வு கொடுப்பது அவசியமாகும்.
கண்கள் சிவந்து காணப்படுதல்: சிறு சிறு ரத்த குழாய்கள் இருக்கும். அந்த இடத்தில் அலர்ஜி, கிருமி தாக்குதல் ஏற்பட்டால் ரத்த குழாய்கள் விரிவடைகின்றது. கண் சிவந்து காணப்படுகிறது. கண் சோர்வு, இரவு தூக்கம் இன்மை, சிறிது நேர தூக்கம், இவற்றுக்கும் இவ்வாறு ஏற்படலாம். கண்ணில் அடிபட்டு கண்கள் சிவந்து விட்டால் தாமதமின்றி மருத்துவரிடம் செல்லவும். அதிக நேரம் சூரிய ஒளியில் கண்ணுக்கு தகுந்த பாதுகாப்பு இன்றி இருப்பதாலும் ஏற்படலாம். மருத்துவர் ஆலோசனை நல்ல தீர்வு தரும்.
கிட்டப் பார்வை, கண்புரை, வைட்டமின் 'ஏ' சத்து இன்மை என்பதும் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய ஒன்றே. மாலைக்கண் நோய் என்பது சிலருக்கு பிறவியிலேயே இருக்கலாம். தேய்மான குறைபாடு உருவாகலாம். ஆரம்ப காலத்திலேயே எதனையும் கவனிப்பது நல்லது.
Lazy eye (சோம்பேறி கண்): பொதுவில் இந்த குறைபாட்டில் ஒரு கண்ணில் பார்வை பலவீனம் இருக்கும். மற்றொரு கண் சாதாரணமாக இருக்கும். குழந்தைகள், பெரியவர் என எல்லா பிரிவிலும் இருக்கலாம். மிக அரிதாக இரண்டு கண்களும் பாதிக்கப்படும். குழந்தைகளுக்கு இந்த குறைபாட்டினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்ல பலன் அளிக்கும்.
இரண்டு கண்களும் ஒரே நேர் கோட்டில் இல்லாமல் இருந்தால் இதனால் பார்வை கோளாறு ஏற்படும். இதற்கு மருத்துவர் சிகிச்சையின் மூலம் பலவீனமான கண்ணினை வலுப்படுத்துவர். அல்லது கூடுதல் சிகிச்சையும் அளிப்பார்.
சிலருக்கு நிறங்களை சரியாக பார்க்க இயலாது. குறிப்பாக சிகப்பு, பச்சை நிறங்களில் இந்த பிரச்சினை எளிதாய் வெளிப்படும். பலர் இந்த குறைப்பாட்டுடன் பிறக்கின்றனர். சிலருக்கு பிறந்த பின்னர் இந்த குறைபாடு ஏற்படலாம். சிலருக்கு மிக அதிகமான பாதிப்பாகவும் ஏற்படலாம். ஆனால் மருத்துவர் உதவியின் மூலம் சில முன்னேற்றங்களை பெற முடியும்.
யூவியய்டிஸ்: கண்ணின் ஒரு பிரிவான யூனியானில் அதிக ரத்த குழாய்கள் இருக்கும். யூவியய்டிஸ் என்ற இந்த பெயர் சில நோய்களின் தொகுப்பாக குறிப்பிடப்படுகின்றது. யூவியய்டிஸ் வீக்கத்தினை ஏற்படுத்துவது. இது கண்ணுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
இதன் அறிகுறிகள்:
மங்களான பார்வை, கண் வலி, கண் சிவப்பு, வெளிச்சம் பார்த்தால் கண்கூசுதல் ஆகியவை ஏற்படலாம். சில உடல்நல பாதிப்பு நோய்களும் யூவியய்டிஸ் பாதிப்பு ஏற்பட காரணமாக இருக்கலாம்.
வெற்றெழுத்து என்று மக்களிடையே பேசப்படும் ஒரு குறைபாடு. படிப்பதில் பார்வை குறைபாடு, பொதுவில் 40 வயதினை நெருங்கும் போது புத்தகத்தினை சற்று தள்ளி வைத்து படிப்பது என்று இருந்தாேல கண் பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்து நன்கு படிக்க முடியும்.
சிறு சிறு துகள்கள் பார்ப்பது போல் நல்ல வெளிச்சம் உள்ள அறையில் அல்லது பளிச்சென்ற வெளிச்சம் வெளியில் இருக்கும் போது தோன்றலாம். அடர்ந்த இருட்டு போல் கண் பக்கவாட்டில் தோன்றலாம். ரெட்டினா பிரச்சினை ஏதுமின்றி இருந்தால் காலம் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சரி செய்ய வேண்டும்.
வறண்ட கண்கள், கண்களில் ஏதோ உறுத்துவது போல், எரிச்சல் இருக்கலாம்.
தானாகவே கண்களில் நீர் வடிந்தபடி இருக்கலாம். கிருமி பாதிப்பு, குழாய் அடைப்பு போன்ற காரணங்களால் ஏற்படலாம். கண்களில் உயர் அழுத்தம் ரெட்டினா குறைபாடுகள் (உ.ம்) வயது கூடுவதனால் ஏற்படும் தேய்மானம். சர்க்கரை நோயால் கண்ணில் பாதிப்பு போன்றவை. கண் இமைகளில் பாதிப்பு. கான்டாக் லென்ஸ்: இதில் கவன குறைவு இவைகளும் ஏற்படும் பாதிப்புகளை அலட்சியபடுத்தாமல் உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.