null
வாழ்க்கையை நலமாக்கும் முயற்சிகள்!
- உள்ளுணர்வு சொல்வதை உற்றுக் கேளுங்கள்.
- வாழ்வில் கஷ்ட நேரத்தில் உதவியவர்களை எந்த நாளும் கைவிடக்கூடாது.
அனைவருக்குமே ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தானே ஆசையாக இருக்கும். ஆனால் அதற்கான சில முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் அல்லவா? அந்த முயற்சிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
* நல்ல வாழ்க்கைக்கு அடிப்படை நல்ல ஆரோக்கியம்தான். ஆக முதல் முயற்சியாக அன்றாடம் 20 முதல் 30 நிமிடங்கள் நடக்க ஆரம்பிக்கலாமே. சாதாரணமாகத் தெரிந்தாலும் இதன் பலன்கள் ஏராளம்.
* வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் ஒழுக்கம் அவசியம். பேசும் பேச்சு, உண்ணும் உணவு என அனைத்திலும் ஒழுக்கமும், கட்டுப்பாடும் அவசியம்.
* ஒருநாளில் ஒவ்வொரு நிமிடமும் எப்படி செலவழிக்கின்றோம் என்பதனைப் பொறுத்தே ஒருவரின் வருங்காலம் நிர்ணயிக்கப்படுகின்றது. இதனை ஒவ்வொரு நொடியிலும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
* அப்பா, அம்மா வாழ்வில் மிக முக்கியம். அவர்களோடு நேரம் செலவழியுங்கள். சேர்ந்து உணவு உண்ணுங்கள். அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
* மிஷின் போன்று ஒரே மாதிரியாக வாழாதீர்கள். வெளியில் செல்லுதல், படித்தல், நண்பர்கள் என வாழ்விற்கு சுவை சேருங்கள்.
* மருத்துவரிடம் எந்த பொய்யும் கூறாதீர்கள். எதனையும் மறைக்காதீர்கள்.
* நேரம், காலத்தில் நல்ல முதலீடு செய்தால் அதன் பலன் மிக சிறப்பாக இருக்கும்.
* உடற்பயிற்சி நல்ல மன நிலையினையும் தரும்.
* புன்னகையும் அவசியம்.
* தைரியம் அவசியம்.
* உள்ளுணர்வு சொல்வதை உற்றுக் கேளுங்கள்.
* பிறரது நேரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* ஒருவர் மன்னிப்பு கேட்ட பிறகு 2 மணி நேரம் அதைப் பற்றியே பேசாதீர்கள்.
* முக்கியமான குறிப்புகளை எழுதி வைக்கலாம்.
* நம்பிக்கையோடு இருங்கள்.
* ஒருவரால் நமக்கு எந்த உதவியும் இல்லை என்றாலும் அவரை மதிக்க வேண்டும்.
* எதிலும் அதிக 'துல்லியம்' என எதிர்பார்த்தால் அந்த செயலை முடிப்பது கடினமாகி விடும்.
* சொல்ல வேண்டியதனை தெளிவாக சொல்லப் பழகுங்கள். முயற்சி செய்வோமே.
சில மாற்றங்களை நாம் செய்தால் வாழ்க்கையும் மாறும்.
* சிறு சிறு அடிகளாக வைத்தாலும் சரியான பாதையில் சென்றால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். குறுக்கு வழி, முன்னேற்றம் என்ற பெயரில் எகிற குதித்து தவறான வழியில் சென்று விடாமல் இருப்பது நல்லது.
* நடைபயிற்சி என்பது வேறு, காலாற நிதானமாய் நடப்பது என்பது வேறு. நடைபயிற்சி என்பது கைகளை சற்று வீசி பேசாமல், துரித நடை செல்வது. காலாற நடப்பது என்பது நிதானமாய் இயற்கையை ரசித்து நம் உறவுகள், நண்பர்களோடு பேசிக் கொண்டோ அல்லது தனியாகவோ நடப்பது, காலாற நடப்பது மனதிற்கு அத்தனை மகிழ்ச்சி தரும்.
* வாழ்வில் திடீர் திடீர் என ஏதோ, எப்படியோ தடங்கல்கள் ஏற்படுகின்றது. வாழ்க்கை நன்கு செல்லும் பொழுதே இந்த தடங்கல்கள், தாக்குதல்களை மனதில் கொண்டு பாதுகாப்புகளை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
* ரொம்ப சவாலாக இருக்கும் செயல் என்றாலும் அதில் உடல், மனம் உறைந்து விட வேண்டாம். அதனையும் மனதில் சற்று எளிதாகவே எடுத்துக் கொண்டுதான் செயல்பட வேண்டும்.
* நல்ல மனம், திறந்த சிரிப்பு, அழகான சூரிய உதயம், மாலை நேர மென்மை இவைகளை அனுபவிக்க ஒருவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அனுபவியுங்கள்.
யார் நல்ல மன மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள்:
* அதிக பந்தா காண்பிக்க மாட்டார்கள்.
* அளவாக பேசுவார்கள்.
* தேவையானவர்களுக்கு உதவுவார்கள்.
* ஊர் வம்பு, தவறான செய்திகளுக்கு காது கொடுக்க மாட்டார்கள்.
* மனம் விட்டு சிரிப்பார்கள்.
கமலி ஸ்ரீபால்
* அன்றாடம் ஏதேனும் கற்பார்கள்.
* நம்மை நாமே பார்த்து பார்த்து செதுக்கிக் கொள்ளும் போது வாழ்க்கை அமைதியாய் இருக்கின்றது.
* நம் துன்பங்களை அதிகம் பகிராமல், புலம்பாமல் அனுபவிக்கும் போது வாழ்வின் நுணுக்கத்தினை நன்கு கற்றுக் கொள்கின்றோம்.
* யாராவது தேவையில்லாமல் உங்களை காயப்படுத்தினால் பதிலுக்கு தொண்டை கிழிய கத்தி சண்டை போட வேண்டாம். அழ வேண்டாம். முடங்க வேண்டாம். அவர்களைப் பார்த்து 'நீங்க நன்றாகத் தானே இருக்கின்றீர்கள். எந்த பிரச்சினையும் இல்லையே?' எனக் கேட்டு விட்டு நகர்ந்து விடுங்கள். எதிராளி புழுங்கி போய் விடுவார்.
* மிக அதிகமாக நண்பர்களை நம்ப வேண்டாம். இது இருவருக்குமே நல்லது. அதே போல் பகைவரையும் எதிரியாகவே நினைக்க வேண்டாம். அவர்களை ஏதேனும் ஒரு நல்ல செயலுக்கு பயன்படுத்துங்கள்.
* யாரேனும் பொய் சொன்னால் அவர்கள் கண்களை சில நொடிகள் உற்று பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுங்கள். இது அவர்கள் மனதினை மணல் போல் உறுத்தி விடும்.
* வாதமான பேச்சு வார்த்தையில் ஆக்ரோஷம் இல்லாமல் அமைதியாகவே பேசலாம்.
* செயல்களின் மூலம் உங்கள் திறமையினை, வெற்றியினை காண்பித்தால் உங்கள் மதிப்பு உயரும்.
* ஒருவர் எந்த மனவேதனையில் இருக்கின்றார் என்பது தெரியாது. ஆகவே யாரிடமும் பண்பாகவே பேசுங்கள்.
* வாழ்வில் கஷ்ட நேரத்தில் உதவியவர்களை எந்த நாளும் கைவிடக்கூடாது.
* நீங்கள் படிக்கும் புத்தகத்தின் தரம் உங்கள் பேச்சில் தெரியும்.
* நீங்கள் உண்ணும் உணவு உங்கள் சக்தியில் ஆரோக்கியத்தில் தெரியும்.
* உங்கள் கவனக் கூர்மை உங்கள் வேலையின் முடிவில் தெரியும்.
* குளிர்ந்த குழாய் நீரில் தினம் 2 முதல் 3 முறை முகத்தில் வேகமாக அடியுங்கள். உடனடியாக புத்துணர்ச்சி கிடைக்கும்.
* டென்ஷனா இருக்கா? ஆழ் மூச்சு பயிற்சி செய்யுங்கள். மனம் அமைதிப்படும்.
* கண்களை வேகமாய் ஒரு நிமிடம மூடி திறங்கள். தூக்கம் நன்கு வரும். முயற்சி செய்து தான் பார்ப்போமே.
சில நபர்களை இவர்கள் 'அரகண்ட்' என்று குறிப்பிடுவர். அதாவது 'திமிர் பிடித்தவர்' என்று பொருள் கொள்ளலாம். இந்த குணம் ஒருவரின் வெற்றியினை தடைப்படுத்தும். அவர்களுக்கே அவர்கள் இப்படி முரட்டுத்தனமாக இருக்கின்றார்கள் என்று தெரியாமல் இருக்கலாம்.
இந்த குணங்கள் ஒருவரிடம் இருந்தால் அவர்கள் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.
* அவர்கள் தகுதியானவர்கள் சொல்வதினை காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.
* அறிவுரை, ஆலோசனை இவர்களுக்குப் பிடிக்காது.
* இவர்கள் அகராதியில் 'Borry' என்ற வார்த்தையே இருக்காது.
* அவர்களது மூளை, உழைப்பை மட்டுமே கொண்டு வெற்றி பெற்றதாக கர்வம் கொள்வார்கள்.
* பிறருக்கு மரியாதை கொடுப்பது என்பது மருந்துக்கு கூட இவர்களிடம் இருக்காது.
* மற்றவர்களை விட தானே எல்லா விதத்திலும் உயர்ந்தவன் என்று நினைப்பார்கள்.
* தானே அனைத்திற்கும் தலைமை வகிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
* கோபம் மட்டுமே இருக்கும்.
* தற்பெருமை மிக அதிகம்.
* கேள்வி கேட்டாலே பிடிக்காது.
* உதவியாளர்களை உதறி எறிவார்.
* பிறரின் சாதனைகளை பாராட்டவே மாட்டார்.
இவைகள் எல்லாம் கண்டிப்பாய் ஒருவர் மாற்றிக் கொள்ள வேண்டிய குணங்கள் ஆகும்.
வாழ்க்கையில் அறிய வேண்டிய சில உண்மைகள்:
* பயம் மரணத்தினை நிறுத்தாது. ஆனால் வாழ்வினையே நிறுத்தி விடும்.
* நம் மன நிம்மதியினை கொடுக்கும் எதுவும் விஷ பாதிப்பே.
* நம்மால் பல விஷயங்களை செய்ய முடியும். ஆனால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்ய முடியாது. எனவே ஒவ்வொரு விஷயத்திலும் முழு கவனம் தேவை.
* நாம் எதிர்பார்த்தபடி வாழ்வில் அநேக நிகழ்வுகள் நடப்பதில்லை. ஆகவே கனவு, எதிர்பார்ப்புகள் அதிகம் வேண்டாம். இயல்பான வாழ்க்கையோடு ஒத்து செல்ல வேண்டும்.
* 20 வயதில் நிறைய கற்க வேண்டும். நிறைய முன்னேற வேண்டும்.
* அமைதியினை விட பேச்சு உதவும் என்றால் மட்டுமே பேச வேண்டும்.
* உங்கள் எண்ணங்கள் மிக வலிமையானவை. ஆகவே அவை ஆக்கப்பூர்வ மாகவே இருக்கட்டும்.
* நீங்கள் வேலை செய்யும் இடத்திலும், பழகும் இடத்திலும் அனைவரும் நண்பர்களாக இருப்பார்கள் என்று எதிர் பார்க்காதீர்கள்.
மனநலம் பெற்றவராக எப்படி மாற முடியும்?
* அனைவருக்கும் கவனம் கொடுங்கள். பக்கத்து வீட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன என இருக்கக் கூடாது.
* பிறர் பேச அதிகம் கேளுங்கள். இது பல விஷயங்களை புரிய வைக்கும்.
* துரோகங்களை தலை விதி என ஏற்கக் கூடாது. மன்னிக்கலாம். ஆனால் மறக்கக் கூடாது.
* அதிக உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
* சில கடின சூழ்நிலைகளில் வேலை செய்யும் போது உங்களை நீங்களே உணர முடியும்.
* குறைவாக பேசுங்கள். அதிகம் கவனம் செலுத்துங்கள்.
* உறுதியான மனநிலை வேண்டும்.
* கெட்ட நண்பர்கள் மட்டும் வேண்டாம். வாழ்வு வீணாகி விடும்.
* நல்ல சுத்தமான ஆடை, தோற்றத்துடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிமிட வாழ்வும் பரிசே.
* ஒருவரை திருத்த முடியவில்லை என்றால் அவர் அந்த எல்லையை மீறி விட்டார் என்றே பொருள்.
* நல்ல மனிதர்களோடு தொடரவும் தவறான மனிதர்களிடமிருந்து நகர்ந்து விடுவதையும் மன பலம் பெற்றவர்கள் செய்வார்கள். மேலும் முன்னேற்ற பாதையில் மட்டுமே செல்வார்கள். உணர்ச்சி வசப்படும் மன பலம் இல்லாதவர்கள் நிலை தடுமாறுவார்கள்.
* புகை பிடிக்கவே மாட்டார்கள்.
* முறையற்ற உணவு இருக்காது.
* புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கும்.
* மிக சத்தமாக இசை கேட்க மாட்டார்கள்.
* எப்போதும் மன உளைச்சல் என்று மூழ்க மாட்டார்கள்.
இவையெல்லாம் 'நல்ல வாழ்க்கை'க்காக கடை பிடித்து பயன் பெறலாமே.