சிறப்புக் கட்டுரைகள்

உடல் உறுப்புகளை பலப்படுத்துங்கள்!

Published On 2025-12-15 16:30 IST   |   Update On 2025-12-15 16:30:00 IST
  • பூண்டு- ரத்த நாளங்களுக்கு நல்லது
  • தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.

வாய் விட்டு மனதார சிரித்தால் நோய் எதிர்ப்பு சக்தி 20 சதவீதம் கூடுகின்றதாம்.

* குளிர்ந்த நீர் (சாதாரண நீரில்) ஷவர் முறையில் குளிக்கும் பொழுது உடலின் செயல்பாட்டுத் திறன் கூடுகிறது.

* சூயிங்கம் மெல்லுவது மூளையின் ஞாபகத்திறனை கூட்ட கூடுதலாக 35 சதவீதம் பலன் அளிக்கின்றது.

* வாழைப்பழம் சாப்பிட்டால் மன அமைதி, மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

* பாட்டு பாடுவது நுரையீரலுக்கான ஏரோபிக் பயிற்சி.

* சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு கிளாஸ் நீர் குடித்தால் 13 சதவீதம் உங்கள் உணவில் கலோரி சத்து அளவு குறையும் நிலை ஏற்படும்.

* பச்சை பசேல் என்ற இயற்கை சூழ்நிலையில் 20 நிமிடங்கள் இருந்தால் மன உளைச்சல் 20 சதவீதம் வரை குறைகின்றது.

* தினமும் மஞ்சள் உணவில் சேர்க்கப்படும் பொழுது வீக்கங்கள், உள் வலிகள் குறைகின்றன.

* மருத்துவர் ஆலோசனைப்படி மக்னீசியம் கிளைசினேட் எடுத்துக் கொள்ளும் பொழுது தசைகளின் டென்ஷன் நீங்கும். மைக்ரேன் பாதிப்பு குறைகின்றது.

* இஞ்சி டீ அஜீரண கோளாறுகளை சீர் செய்கின்றது.

* எளிதில் உடையும் நகம், முடி இவை பயோடின் குறைபாடாகக் கூட இருக்கலாம்.

* வாய் ஓரத்தில் வெடிப்பு, புண் இருந்தால் இரும்பு சத்து வைட்டமின் பி பிரிவு சத்துகள் குறைபாடாக இருக்கின்றதா என்பதனை அறிய வேண்டும்.

* அடிக்கடி தசை பிடிப்பு ஏற்படுகின்றதா? கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் குறைபாடு இருக்கின்றதா என மருத்துவர் மூலம் அறிய வேண்டும்.

* காயங்கள் மெதுவாக ஆறுகின்றதா? பல காரணங்களுடன் துத்தநாகம் குறைபாடு கூட காரணமாக இருக்கலாம்.

* இரவில் பார்வை குறைபாடு உள்ளவதற்கு வைட்டமின் 'ஏ' குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம்.

* வெளிறிய சருமம்- இரும்பு சத்து, குறைபாடும் காரணமாக இருக்கலாம்.

கமலி ஸ்ரீபால்

 

* ஈறுகளில் ரத்தம்- வைட்டமின் 'சி' குறைபாடாக இருக்கலாம்.

* அடிக்கடி கிருமி தாக்குதல்- சிங்க், வைட்டமின் 'சி' குறைபாடு இருக்கலாம்.

பார்லி தண்ணீர்:

நம் வீட்டில் பெரியவர்கள் இன்றும் பார்லி அரிசி தண்ணீர் குடிப்பதனை அடிக்கடி செய்வர். அவர்கள் என்ன காரணத்திற்காக செய்தனரோ- இன்று அதில் விஞ்ஞானப் பூர்வமாக அநேக நன்மைகள் கூறப்பட்டு உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதனை அடிக்கடி குடிக்கின்றனர்.

* இது வைட்டமின் போலேட், இரும்பு, காப்பர்மங்கனீஸ் சத்து நிறைந்தது.

* கொலஸ்டிராலினை குறைக்கின்றது.

* ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகின்றது.

* எடை குறைப்பிற்கு உதவுகின்றது.

* புற்று நோய் தாக்குதல் அபாயத்தினை குறைக்கின்றது.

* உடல் கழிவுகள் வெளியேற உதவுகின்றது.

* குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.

* நீர் சத்து குறைவதினை தடுக்கின்றது.

* சிறு நீரக நச்சுகளை வெளியேற்றுகின்றது.

சில குடல் பிரச்சினைகள், அலர்ஜி உள்ளவர்கள் பார்லி எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

* டீ, காபி என்பதனை விட சீரக தண்ணீர், பார்லி தண்ணீர் போன்றவை நன்மை பயப்பவை ஆகும். ஆனால் எதனையும் அளவோடு செய்வதே நல்லது.

* பார்லி கலோரி சத்து குறைந்தது. வைட்ட மின்கள் பி2, பி3, பி6 கொண்டது. நார்சத்து கொண்டது. ஓட்ஸ் பாஸ்பரஸ், சிங்க், காப்பர், மக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் வைட்டமின் பி1, பி5 கொண்டது. க்ளூடன் இல்லாதது. 'ஸ்டீல் கட் ஓட்ஸ்' என வாங்கி இதனையும் பயன்படுத்துங்கள்.

ரத்தக் கொதிப்பு- உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது.

கீரை வகைகள்- பொட்டாசியம் சத்து உள்ளது.

பீட்ரூட்- நைட்ரேட் சத்தை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றும்.

வாழைப்பழம்- சோடியம் முறைப்படும்

பூண்டு- ரத்த நாளங்களுக்கு நல்லது

மீன் உணவு- ஒமேகா 3

பொரி வகைகள்- ஆண்டி ஆக்சிடண்ட்

போன்றவற்றினை எடுத்துக் கொள்வோம். கீழ்கண்ட உணவுகளை தவிர்த்து விடுவோம்.

அதிக உப்பு, வறுத்த, பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட அசைவம், சோடா, அதிக உப்பு சேர்த்த சீஸ் பேக்கரி உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றினை தவிர்த்து விடுவோம்.

பாதங்கள் சில்லென இருந்தால்- தைராய்டு பிரச்சினை, சர்க்கரை நோய், ரத்த சோகை இருக்கலாம்.

பாதம் எரிச்சலாக இருந்தால் - சர்க்கரை நோய், நரம்பு பாதிப்பு, வைட்டமின் குறைபாடு, பித்த வெடிப்பு, நீர் பற்றாகுறை, தைராய்டு பிரச்சினை, சரும பாதிப்பு, சத்து குறைபாடு இருக்கலாம்.

ஆறாத புண்

சர்க்கரை நோய், கிருமி தாக்குதல், சீரான ரத்த ஓட்டம் இன்மை, வலி ஆர்த்ரைட்டிஸ், பிற கோளாறுகள். உதாரணம் எலும்பு முறிவு என இவையெல்லாம் இருக்கக் கூடும். மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததுதானே.

* ஜீரண சக்தி சீராய் இயங்க

* ஒவ்வாத உணவுகளை ஒதுக்கிவிட வேண்டும்.

* நன்குமென்று, பொறுமையாய் உண்ண வேண்டும்.

* அமர்ந்து உண்ண வேண்டும். அந்நேரத்தில் அரட்டை, போன், டிவி, இவற்றினை தவிர்த்திட வேண்டும்.

* நார் சத்து அவசியம்.

* தேவையான அளவு நீர் அருந்த வேண்டும்.

* வேக வைத்த காய்கறிகள் சிறந்தது.

* 'ஸ்ட்ரெஸ்சில் மூழ்க கூடாது.

* வெறும் உடற்பயிற்சி மட்டுமே போதாது. நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.

தண்ணீர் இப்படியும் குடிக்கலாம்.

* தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.

* சில துளி இஞ்சி சாறு சேர்க்கலாம்.

* சில புதினா இலைகளை சேர்த்து குடிக்கலாம்.

* மோர் குடிக்கலாம்.

* வெள்ளரி சாறு எடுத்துக் கொள்ளலாம்.

* சுத்தமான தேன் ஒரு டீஸ்பூன் கலந்து குடிக்கலாம்.

* வெது வெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கலாம்.

* இளநீர் நல்லது.

* ஒரு டீஸ்பூன் சோம்பினை நன்கு நீரில் கொதிக்க வைத்து பருகலாம்.

* சீரகத் தண்ணி நாள் முழுவதும் குடிக்கலாம்.

உடல் உறுப்புகள்

* வெகு நேரம் பசியுடன் நீர் கூட அருந்தாமல் இருந்தால் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும்.

* போதுமான அளவுநீர், தாகம் எடுக்கும் பொழுது நீர் அருந்தாமல் இருந்தால் சிறு நீரகமும் பாதிக்கப்படலாம்.

* அதிக ஸ்ட்ரெஸ் அறிவுப் பூர்வமான எண்ணங்கள், மூளை நலத்தினை, மன நலத்தினை பாதிக்கும்.

* இருட்டில் போனில் பிரகாசமான ஒளி, டி.வி. இவற்றினை பார்ப்பது கண்களை பாதிக்கும்.

* துரித உணவு, மது- கல்லீரலை பாதிக்கும்.

* எண்ணெய், கொழுப்பு உணவு குடலை பாதிக்கும்.

* அதிக உப்பு, எண்ணை உணவு இருதயத்தினை பாதிக்கும்.

* தலையை பிளக்கும் சத்தத்தில் பாட்டு கேட்பது காதுகளை பாதிக்கும்.

* புகை பிடிப்பது நுரையீரலை அழித்து விடும்.

இவைகளும் நம் பழக்கத்தில் இருப்பவைதான்.

* சில்லென்ற நீரினை மருந்தோடு சேர்த்து அருந்துவதில்லை.

* மாலை 5 மணிக்கு பிறகு கனமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* சாப்பிட்ட உடன் படுக்கக் கூடாது.

* செல்போன் சார்ஜ் 10 சதவீதம் மட்டுமே இருந்தால் சார்ஜ் செய்யுங்கள். அந்த 10 சதவீதம் தீரும் வரை பேச வேண்டாம்.

* காலை உணவினை தவிர்க்கக் கூடாது. * உணவுக்குப் பின் உடனே டீ, காபி வேண்டாமே. * ஒரு மணி நேரம் அமர்ந்து இருந்தால் எழுந்து கை, கால்களை நீட்டி மடக்குங்கள். * உணவுக்குப் பின் பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். * உபயோகித்த எண்ணையை அடிக்கடி சூடு படுத்தி சமைப்பது நஞ்சு.

உறுப்புகள் பலம் பெற:

* வயிறு பலம் பெற- வயிற்று மசாஜ் செய்வது ஜீரண சக்தியினை அதிகரிக்கும். வயிறு உப்பிசம் குறையும்.

* நுரையீரல் பலம் பெற- வாய் விட்டு பாடுங்கள், இசை பயிலுங்கள், தினமும் பாட்டு பயிற்சி செய்யுங்கள், மூச்சும் சீராய் இயங்கும்.

* சிறுநீரகம் பலம் பெற- கால் விரல் நுனிகளில் நிற்கும்படி பாதத்தினை உயர்த்தி, இறக்கி பயிற்சி செய்யுங்கள். ரத்த ஓட்டம் முன்னேற்றம் தரும்.

* மூளை பலம் பெற- தினமும் 20 நிமிடம் தியானம் செய்யுங்கள்.

* கல்லீரல் பலம் பெற- தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடை பயிற்சி செய்யுங்கள். * இருதயம் பலம் பெற- ஆழ்மூச்சு பயிற்சியும் உதவும். * குடல் பலம் பெற- இடுப்பு பயிற்சிகளை முறையாய் கற்று பயிற்சி செய்ய வேண்டும். * கண்கள் பலம் பெற- கண் பயிற்சியும் அவசியம்.

இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை மட்டுமே பாதிப்பிற்கு தீர்வாக அமையாது. தீர்விற்கான பலம், தடுப்பு முறை சக்தி என விளங்கும். மருத்துவர் ஆலோசனை, சிகிச்சை என்பது அவசியம். ஆனால் நாம் அறிந்த வற்றினை ஞாபகப்படுத்தி செயல்படுத்துவோமே.

Tags:    

Similar News