கருப்பை இறக்கம் வராமல் தடுக்கும் உடற்பயிற்சி - எளிய சிகிச்சைகள்
- பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு அவர்கள் பிரசவத்துக்கு பிந்தைய உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- இன்றைய காலத்தில் நவீன சிகிச்சை முறைகளில் இடுப்புத்தள தசை மீளுருவாக்கம் எனப்படும் சிகிச்சை இருக்கிறது.
பெண்களை பாதிக்கின்ற கர்ப்பப்பை குடலிறக்கம் பற்றி பார்த்து வருகிறோம். இது வயதான பெண்களை மட்டுமல்ல, இளம் வயது பெண்களையும் பாதிக்கிறது. பெண்களின் இடுப்பு பகுதிக்கு கீழே உள்ள இடுப்புத்தள தசை தளர்வு அடைவதே இதற்கு முக்கிய காரணமாகும். இளம் வயது பெண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டால் இதற்கு எளிமையான நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. இதனை தடுப்பதற்கான வழிமுறை என்பது முறையான பிரசவ முறையாகும். எனவே பிரசவத்தை முறையாக பார்க்க வேண்டும்.
சில பெண்களுக்கு பிரசவம் சரியான முறையில் நடந்தால் கூட அவர்களுக்கு இடுப்புத்தள தசை தளர்வு ஏற்படும். பிரசவத்துக்கு பிறகு இடுப்புத்தள தசையில் இருக்கும் காயம் குணம் அடைந்தாலும், தசைகள் பழைய வலிமையுடன் மீண்டும் வராத நிலை ஏற்படுகிறது. ஒருவர் குழந்தை பெற்றதும் அடிவயிறு தளர்வான பிறகு, கண்டிப்பாக அதில் சுருக்கங்கள், தளர்வுகள் ஏற்படும். இதனை சீராக்கி மீளுருவாக்கம் செய்வதற்கு என்னென்ன முறைகள் செய்ய வேண்டும், கருப்பை இறக்கத்துக்கு சிகிச்சை மூலம் முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.
பெண்கள் பிரசவத்துக்கு பிந்தைய உடற்பயிற்சி செய்ய வேண்டும்:
பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு அவர்கள் பிரசவத்துக்கு பிந்தைய உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது குழந்தை பெற்றெடுத்த பெண்களின் உடல் வலிமையையும், ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்க செய்யப்படும் உடற்பயிற்சிகள் ஆகும். இந்த உடற்பயிற்சியானது இடுப்புத்தள தசையை வலுப்படுத்துவதற்கும், உறுதியாக வைத்திருப்பதற்கும் செய்கின்ற முக்கியமான விஷயம் ஆகும்.
இந்த இடுப்புத்தள தசையை சீர்படுத்துவதற்கு சில பயிற்சி முறைகளும் உள்ளன. முக்கியமாக கெகல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது ஓரளவு இந்த வலிமையை அதிகரிக்க முடியும். இது தவிர வேறு சிகிச்சை முறைகளில் இடுப்புத்தள தசை தளர்வான பெண்கள், கெகல் உடற்பயிற்சி செய்தால் கூட இந்த பகுதி தளர்வு சரியாகும். சிறுநீர் கசிவு குறைவாகும்.
இதற்கான முக்கியமான விஷயம், இந்த இடுப்புத்தள தசைகளின் வலிமையை அறிந்து கொள்வதற்கு பெல்விக் புளோர் கிளிதிஸ்கிராபி என்ற ஒரு பரிசோதனையை செய்கிறோம். இது இடுப்புத்தள தசைகளின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கான ஒரு மருத்துவ பரிசோதனை ஆகும். இதை இடுப்புத்தள தசை வலிமை பரிசோதனை என்றும் கூறலாம்.
இந்த பரிசோதனை முறையில் இடுப்புத்தள தசை எவ்வளவு தளர்வாகி இருக்கிறது என்பதை கவனித்து பார்த்து, அதற்கான சில முறைகள், குறிப்பாக யூரோடைனமிக் சோதனை செய்வோம். ஏனென்றால் சிறுநீர் குழாய் எவ்வளவு தூரம் இறங்கி இருக்கிறது, எவ்வளவு தூரம் அதனுடைய சிறுநீர்ப்பை தசைநாண் கசிவு இருக்கிறது என்பதை பரிசோதிக்க வேண்டும்.
அதற்கு அடுத்து இடுப்புத்தள தசை வலிமையை அறிவதற்கான பரிசோதனை முறைகள் இருக்கிறது. இந்த பரிசோதனை முறைகள் மூலமாக இதனை அறிந்து, இது எந்த அளவுக்கு தளர்வாகி இருக்கிறதோ, அதற்கு சில எளிமையான பயிற்சிகள் முறைகள் இருக்கிறது. அதன் மூலம் அது சரியாகும்.
இடுப்புத்தள தசை தளர்வை சரி செய்யும் லேசர் தெரபி:
சிலருக்கு இன்றைய நவீன சிகிச்சை முறைகளில் முக்கியமான சில விஷயங்களை செய்ய முடியும். இந்த இடுப்புத்தள தசை தளர்வாகி யோனி தளர்ச்சி ஆவதை நல்ல வகையில் சரி செய்வதற்கு முக்கியமான தெரபி லேசர் தெரபியாகும்.
இன்றைக்கு நாம் ஒருதடவை அறுவை சிகிச்சை செய்திருக்கிறோம், தையல் போட்டு இருக்கிறோம், அது சரியாக குணமடையாத போது பலநேரங்களில் வலிகளும் ஏற்படும். அந்த திசுக்களை ஒன்றாக இணைக்கும் புரதமானது சீராக இல்லாமல் பல நேரங்களில் ஒழுங்கற்ற முறையில் இருக்கும். இதனால் தான் நிறைய பெண்களுக்கு வலிகள் ஏற்படும். பாலியல் உறவின்போது திருப்தி இருக்காது. இதனை சரி செய்வதற்கு எளி மையான, உடலுக்கு காயம் ஏற்படுத்தாத முறை தான் லேசர்.
இந்த லேசர் முறையானது இந்த திசுக்களை ஒன்றாக இணைக்கும் புரதத்தை உருவாக்குவதை முக்கியமாக சீர்படுத்துகிறது. ஏனென்றால் இந்த புரதம் உருவாகுதல் சீராக இல்லாமல் ஒழுங்கற்ற முறையில் இருப்பதால் தான் இந்த தசைகளின் அமைப்பு மற்றும் வலிமை குறைவாகிறது.
எனவே இதனை சரி செய்வதற்கு இந்த லேசர் முறையின் மூலமாக, எளிமையான லேசர் தெரபி கொடுக்கும் போது இடுப்புத்தள தசையின் வலிமையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனுடைய சுருங்கும் ஆற்றல் மீண்டும் கிடைக்கிறது. அந்த தசைகளின் வடிவமைப்பானது சீராகிறது. திசுக்களை இணைக்கும் புரதம் உருவாவதில் முன்னேற்றம் ஏற்படும்போது அதனுடைய திறனும், அதனுடைய நார்த்திசுவும் சீராகி பிரச்சினை சீராக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை இல்லாத, உடலில் காயம் ஏற்படுத்தாத முறை:
இன்றைக்கும் நிறைய நோயாளிகள் பிரசவம் ஆன பிறகு ஏற்படுகிற பாலியல் பிரச்சினைக்கு தான் எங்களிடம் சிகிச்சை பெற வருகிறார்கள். இவர்களுக்கு இந்த பிரச்சினையை எளிமையான முறையில் மிகவும் அருமையாக சரி செய்ய முடியும். இது அறுவை சிகிச்சை இல்லாத, உடலில் காயம் ஏற்படுத்தாத முறை ஆகும். இதற்கு மயக்க மருந்து தேவையில்லை, உள் நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவமனைக்கு வந்து 45 நிமிடத்தில் இதை செய்து விட்டு வீட்டுக்கு போய்விடலாம். தங்களுடைய வேலைகளை பார்க்கலாம். இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது. இதற்கு பிறகு எந்த பிரச்சினையும் வருவதற்கு வாய்ப்பே இல்லை. இதனால் வருகின்ற சிக்கல்கள் ரொம்ப ரொம்ப குறைவு.
இயற்கையாக அந்த லேசர் பழுதான தசைகள் மற்றும் தசைநார்களை சரி செய்து அதனை முன்னேற்றம் அடைய செய்யும் போது தசைகளின் வலிமை சரியாகிறது. அதனால் இடுப்புத்தள தசை பிரச்சினைகளுக்கான அறிகுறிகளும் குறைவாகி நல்ல ஒரு செயல்பாடு மீண்டும் கிடைக்கிறது.
எனவே கெகல் பயிற்சி, பிசியோதெரபி, அதற்கு அடுத்ததாக முக்கியமாக ஒரு லேசர், இதற்கு அடுத்த இப்போதைய காலத்தில் இருக்கின்ற நவீன முறைகளில் ஒரு இடுப்புத்தள தசை தெரபி ஆகியவை ஆகும். ஒரு இருக்கை மூலமாக அந்த தசைகளை வைப்ரேஷன் கொடுப்பது ஒரு முக்கியமான தெரபி. நமது முகத்தில் உள்ள தசைகள் சாதாரணமாக தளர்வாகிறது என்றால் என்ன செய்கிறோம்? அதை வலுவாக்கு வதற்கான தெரபி கொடுக்கிறோம், மசாஜ் செய்கிறோம், அதற்கான தூண்டுதல் கொடுக்கிறோம். இதே மாதிரி பெண் உறுப்புகளில் இருக்கிற தசைகளை வலுவாக்குவதற்கு சில தூண்டுதல் புள்ளிகளில் அதனுடைய தசைகளுக்கு தூண்டுதல் கொடுக்கவேண்டும்.
இந்த தூண்டுதல் முறையின் மூலமாக தசைகளின் வலிமை முன்னேற்றம் அடைகிறது. சில பெண்களுக்கு குணமடையும் தன்மை இல்லாமல் இருக்கும். இதற்கு லேசர் நன்கு உறுதுணை புரியும். தசைகளின் செயல்பாடு, தசைகளின் ஆற்றல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காக, தசை தளர்வான பெண்களுக்கு இடுப்புத்தள தசை தூண்டுதல் முறை மூலமாக, தசைகளை தூண்டிவிட்டு சிகிச்சை அளிக்கும்போது அதனுடைய வலிமை சீராகி தளர்வான விஷயங்களுக்கு தடுப்பு முறையாக அமையும்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
பெண்கள் குழப்பம் அடைய தேவையில்லை:
இன்றைய காலத்தில் நவீன சிகிச்சை முறைகளில் இடுப்புத்தள தசை மீளுருவாக்கம் எனப்படும் சிகிச்சை இருக்கிறது. இந்த சிகிச்சையை முறையாக செய்தால் அருமையாக இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும். மாதம் ஒரு முறை என 3 அமர்வில் சிகிச்சை எடுத்தால் பிரச்சினை முழுவதுமாக சரியாகும்.
ஏனென்றால் பலரும் வயதானால்தான் இடுப்புத்தள தசை தளர்வு வரும். நமக்கு வேறு ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறார்கள். பிரசவமான பிறகு பெண்கள் இடுப்புத்தள தசையை மீளுரு வாக்கம் செய்ய வேண்டும். இது அவர்களின் பாலியல் உறவு பிரச்சினைகளுக்கு முக்கியமான தீர்வாக அமைகிறது.
இன்றைக்கும் இதை பற்றிய ஆய்வில் சொல்லியிருக்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இது ஒரு எளிமையான சிகிச்சை முறை. இதன் மூலமாக பிற்காலத்தில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு முன்னரே தீர்வு கிடைக்கிறது.
ஆனால் இதை சிலர் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். இப்போதைக்கு எனக்கு பாலியல் உறவு பிரச்சினை இருக்கிறது, ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. சிறுநீர் கசிவு ஏற்படுகிறது, அதை நான் கட்டுப்படுத்தி சரி செய்து கொள்கிறேன் என்று சொல்கின்ற பெண்களுக்கு, பிற்காலத்தில் முழுமையாக கருப்பை குடலிறக்கம், சிறுநீர் முற்றிலும் கட்டுப்பாடே இல்லாத நிலை, எழுந்து நின்றாலே சிறுநீர் கசிவு ஏற்படுகிற நிலை ஆகிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
எனவே இதை தடுப்பதற்கான எளிதான வழிமுறைகள் இருக்கிறது. இவற்றினை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் பலரும் அமைதியாக இருந்து, இதைப்பற்றி கவலைப்பட்டு யாரிடம் கேட்பது, என்ன செய்வது என்று குழப்பம் அடைய தேவையில்லை. இந்த முறையான சிகிச்சைகள் பெண்களுக்கு சரியான தீர்வை கொடுக்கும். இடுப்புத்தள தசைக்கான உடற்பயிற்சி, லேசர் சிகிச்சை மற்றும் இடுப்புத்தள தசை தூண்டுதல் ஆகியவற்றை நீங்கள் முறையாக செய்தால் இடுப்புத்தள தசை தளர்வு சரிசெய்யப்படும். அதனால் கருப்பை குடலிறக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். இடுப்புத்தள தசை தளர்வால் ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சினைகள், பாலியல் உறவு பிரச்சினைகள் ஆகிய வற்றுக்கும் முழுமையான தீர்வு கிடைக்கும்.