சிறப்புக் கட்டுரைகள்
null

மருத்துவம் அறிவோம் - வெயிலை சமாளிக்கும் வழிகள்

Published On 2025-04-28 15:03 IST   |   Update On 2025-04-28 15:06:00 IST
  • ஒரு பிரச்சினையை பூதாகரமாக பார்க்காதீர்கள். முடிந்தவரை அதனை சிறு துண்டுகளாக உடைத்து விடுங்கள்.
  • கோபம் உங்கள் சிந்தனையை, எண்ண ஓட்டத்தினை சுருங்க வைத்து விடும்.

கொளுத்தும் வெயிலில் தண்ணி குடியுங்கள்... தண்ணி குடியுங்கள்... என விடாமல் அறிவுறுத்தப்படுகின்றது. வீட்டிலே இருந்தால் கூட இந்த வெயிலில் வாடி விடுவீர்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணி குடியுங்கள். இதை அனைவரும் செய்துதான் ஆக வேண்டும். செய்வோம். ஆனால் தினந்தோறும் 8 கிளாஸ் தண்ணி குடியுங்கள் என்று சொல்றாங்களே. அதை எப்படி செயல்படுத்த சொல்கின்றார்கள். தெரியுமா?

* காலை 6 மணி முதல் 7 மணிக்குள் தூங்கி எழுந்து பல் விளக்கிய பிறகு 2 கிளாஸ் நீர் பருகுவது. * உடலில் நச்சுக்களை நீக்கும். * மூளைக்கு நீர் சத்து கிடைக்கும். * ஜீரண உறுப்புகள் சீராய் செயல்பட ஆரம்பிக்கும்.

* காலை 8 மணி முதல் 9 மணி அளவில் சிற்றுண்டிக்குப் பிறகு ஒரு கிளாஸ் நீர் பருகுவதால் மூட்டுக்கள் இறுக்கமின்றி இருக்கும்.

* மதிய உணவிற்கு 1 மணி நேரம் முன்னால் ஒரு கிளாஸ் நீர் பருகுவது அதிக கொழுப்பினை எரிக்கும். உடல் செயல் பாட்டுத்திறன் கூடும். ஜீரண சக்தி கூடும்.

* மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் அதாவது மதிய உணவு அருந்தி ஒரு மணி நேரம் சென்று ஒரு கிளாஸ் நீர் பருகுவது சீக்கிரம் முதுமை எற்படுவதினைத் தவிர்க்கும். திசுக்களின் உறுதிக்கு உதவும்.

* மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் ஒரு கிளாஸ் நீர், டீ பருகு வதற்கு முன்னால் அருந்தி னால் அசிடிடி பாதிப்பு குறையும்.

* மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் ஒரு கிளாஸ் நீர் அருந்துவதால் (இரவு உணவிற்கு முன்னால்) அதிக உணவு உட்கொள்வதினைத் தவிர்க்கும்.

* குடல் புற்றுநோய் பாதிப்பு அபாயம் 45 சதவீதம் குறைகின்றதாம்.

* இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் ஒரு கிளாஸ் நீர் அருந்துவது. இரவு உணவிற்கு பிறகு ஒரு மணி நேரம் சென்று சத்துகள் உடலில் நன்கு உறிஞ்சப்படுகின்றன.

* மலச்சிக்கல் இன்றி இருக்க உதவுகின்றது.

* இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் ஒரு கிளாஸ் நீர் அருந்துவது (தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்னால்) உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவும்.

* பக்கவாத பாதிப்பு, இருதய பாதிப்பினை தவிர்க்க உதவலாம். இந்த ஆய்வு கட்டுரையினை படித்தேன். ஆரோக்கியம் என்பது சத்துணவு, நீர் இவற்றினை எடுத்துக் கொள்ளும் முறை என பல விரிவாக்கங்களைப் பெற்றுள்ளது. கடிகாரம் பார்த்து நிமிடம் தவறாமல் கடை பிடிக்க வேண்டும் என்ப தில்லை. ஆனால் முடிந்தவரை பின்பற்றலாம்.

பொதுவில் நீர் குடிப்பதற்கு விதி முறை போல சில விடாத முயற்சி களையும் நம் ஆரோக்கி யத்திற்காக நாம் செய்ய வேண்டும்.

 

* உங்கள் உணவு, தூக்கம், உடற்பயிற்சி மிக முக்கியம்.

* நம் நிலைக்கு நாம் முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

* எது கடினம் என்று வாழ்வில் எதிர் வந்து நிற்கின்றதோ அதனை அடித்து விரட்டி விடுங்கள். இல்லை எனில் கவலை ஆரோக்கியத்தினை விழுங்கி விடும்.

* எல்லா சூழ்நிலைகளையும் வெயிலோ, குளிரோ, கஷ்டமோ, நஷ்டமோ, நாம் அதனை ஈடு கொடுத்து வாழத்தான் வேண்டும். (கரப்பான்பூச்சி போல, கரப்பான் பூச்சி எந்த சூழலுக்கும் தன்னை சரி செய்து கொள்ளும்).

* ஒரு பிரச்சினையை பூதாகரமாக பார்க்காதீர்கள். முடிந்தவரை அதனை சிறு துண்டுகளாக உடைத்து விடுங்கள்.

* சம்பாதித்து சேமிக்க வேண்டும். இதுவும் தேவையான அளவிற்கு அவசியமே.

* குடைந்து குடைந்து யோசித்துக் கொண்டே இருக்க வேண்டாமே. வாழ்க்கை முடிந்து விடும். * நாம் நம் மீது அன்பு செலுத்தினால், நாம் நம்மீது மரியாதை செலுத்தினால், பிறரும் நமக்கு அதனைச் செய்வர்.

* அழிவுப் பூர்வமான சிந்தனை உடையவர்கள் பக்கத்தில் இருந்தால் உங்கள் சக்தியை இழந்து விடுவீர்கள். அவர்களிடம் இருந்து ஓடி விடுங்கள். உடல் நலம்! உடல் ஆரோக்கியம்தான் முதன்மை யான செல்வம் என்பதனை உணர வேண்டும். ஆகவே உடல் ஆரோக்கியத்தில் முழு அக்கறை செலுத்துங்கள்.

எப்போதும் பிறர் தோளில் சாய்ந்து பயணிக்காதீர்கள். மற்றவர்களையும் உங்கள் மீது சுமையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஏனெனில் ஒவ்வொருவரின் இலக்கும் தனித்தனியானது. இதில் கூட்டு வேண்டாம்.

மற்ற மனிதர்களிடம் எதனையும் எதிர்பார்க்காமல் இருந்தாலே ஆரவாரமற்ற மகிழ்ச்சி இருக்கும். சக்தி நம் பொக்கிஷம். இதனை நம் வளர்ச்சிக்கு திறமையை வளர்ப்பதற்கும் உருவாக்குவதற்கும் பயன்படுத்த வேண்டும். சக்தியினை பயத்தால் விரயம் செய்யக்கூடாது. இளமைக் காலம் நிரந்தரமற்றது. அதனை திறமையை சேமிக்கும் காலமாக மாற்றிவிட வேண்டும். எதற்கு பிறரை மாற்ற முயல வேண்டும்.

அனைவர் கூறும் அறிவுரையினையும் ஏற்றால் குழம்பிதான் நிற்போம். சுய ஒழுக்கம் இல்லாமல் எந்த முன்னேற்றமும் பெற முடியாது.

ஒருவர் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்கு சுய ஒழுக்கம் அவசியம். இறப்பும் பிறப்பும் யாருக்கு இல்லை. இடைபட்ட காலத்தில் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டாமா?

அதற்கு உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் உங்களுக்குள்ளேயே இருக்கட்டுமே. பிறரிடம் புள்ளி மாறாமல் சொல்ல வேண்டுமா என்ன?

தனித்து இருக்கும் பொழுது அமைதி உங்களை நோக்கி கவர்ந்து வரும். தீய சக்திகள் சுத்தி இருக்காது. சுயமரியாதை உங்கள் வாழ்வில் முதல் இடத் தில் இருக்க வேண்டும். கோபம், வேகம் இவற்றினை ஒருவர் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

பிறரை கட்டுப்படுத்துவது கட்டுப்பாடு ஆகாது.

கோபம் உங்கள் சிந்தனையை, எண்ண ஓட்டத்தினை சுருங்க வைத்து விடும். மற்றவர் உங்களை எரிச்சல் அடையச் செய்யும் போது, கட்டுப்பாடுதான் மிகப் பெரிய சக்தி. அதனை இழக்க மாட்டேன் என உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

மன உறுதி கொண்டவர்கள் கடுமையான சூழ்நிலைகளில் கூட, இது நிரந்தரமற்றது. தற்காலிகமானது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. தெளிவு பெற்று செயலாற்றுவோம் என்றே நினைப்பார்கள்.

நேர்கொண்ட பார்வை அமைதியான மூச்சு, தெளிவான படபடப்பற்ற குரல், பேச்சு இவற்றுடனேயே காணப்படுவர்.

ஒரு நல்ல மனிதராக பண்புள்ளவராக ஒருவர் உருவாக வேண்டும். என்றால் சில பழக்கங்கள் நம் ரத்தத்தில் இருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள சுய ஒழுக்கங்கள் அவசியம். தீய பழக்கங்களை ஒவ்வொன்றாக சீக்கிரம் விட்டு விட வேண்டும். வருங்காலம் பற்றிய கவலை கூடாது. தோல்விகளைக் கண்டு சுருங்க கூடாது.

தவறு செய்துவிட்டால் தவறு என்று ஒப்புக் கொள்ளலாமே.

எளிமையைவிட பணக்கார வாழ்வே கிடையாது. கடந்த காலம்- அது போய்விட்ட காலம். சிறு வியாபாரம் செய்து பார்க்கலாமே. ஆக்கப்பூர்வ எண்ணம், ஆக்கப்பூர்வ மக்கள் இது மட்டுமே தேவை.

 

கமலி ஸ்ரீபால்

உங்களிடம் இருக்கும். எதனையும் போற்றி கொண்டாடுங்கள். உதாரணம்- புத்தகங்கள், உங்கள் தாத்தா கால நாற்காலி,

திறமைகள்தான் உண்மையான சொத்து. சாக்கு போக்கு சொல்வது கவுரவக் குறைவு தான். தைரியம், துணிச்சல் இல்லாவிட்டால் வீட்டிலேயே முடங்கிவிடலாம்.

காலை 6 மணிக்குள் எழுந்திருப்பின் சாதனையாளன். உங்கள்வாழ்க்கையை நீங்கள் விரும்ப வேண்டும். அதற்கு காரணமும் வேண்டும். உங்கள் சக்தியினை அரட்டை அடிப்பதிலும், தேவையற்று ஊர் சுற்றுவதிலும் செல வழிக்காதீர்கள். வேண்டாத விஷயங் களையோ, வேண்டாத நபர்களையோ ஒதுக்கத் தெரிய வேண்டும். பொறாமை கூடவே கூடாது. ஒரு வரை அது அரித்து விடும். அன்றாடம் தனியாக சிறிதுநேரம் இருக்க வேண்டும்.

இந்த நொடியில் வாழுங்கள்.

நீங்கள் நீங்களாக மட்டுமே எப்பொழுதும் இருங்கள்.

* உடல் ஆரோக்கியம் வேண்டு மென்றால் 80 சதவீதம் உணவில் கட்டுப்பாடு தேவை. உடற்பயிற்சி 20 சதவீதம் தேவை.

* நிலைத்த மகிழ்ச்சி வேண்டு மென்றால் 80 சதவீதம் கொள்கையோடு, நோக்கத்தோடு வேலை செய்ய வேண்டும்.

20 சதவீதம் தமாஷ், கேளிக்கை என்று இருக்க வேண்டும்.

* பணம், செல்வம் வேண்டும் என்றால் நல்ல பழக்க வழக்கங்கள், குணங்கள் 80 சதவீதம் தேவை. 20 சதவீதம் கணக்காக இருக்க வேண்டும்.

* ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் 80 சதவீதம் பலர் அனுபவங்களை படித்து, கேட்டு முயலுங்கள்.

20 சதவீதம் மட்டுமே பேசுங்கள். * படித்து அறிய வேண்டுமா 80 சதவீதம் புரிந்து கொள்ளுங்கள்.

20 சதவீதம் நன்றாக படிப்பு கூடும்.

* 80 சதவீதம் கடும் முயற்சி கண்டிப்பாய் முன்னேற்றம் தரும். இதில் 20 சதவீதம் பல புது கருத்துக்கள், யுக்திகள் சேரும்.

* முக்கியமான செயல்களுக்கு 80 சதவீதம் முதலிடம் கொடுங்கள். 20 சதவீதம் வேலைகள் தானாகவே வரிசையில் அமைந்து விடும்.

முன்பெல்லாம் இப்படித்தான் செய்தார்களாம்

* தலை வலித்தால் வாழைப்பழம் சாப்பிடுவார்களாம். இதிலுள்ள மக்னீஷியம் ரத்த குழாய்களை தளர்த்தும்.

* மூட்டுவலிக்கு அன்னாசி பழம் சாப்பிடுவார்களாம். இது வீக்கத்தினை குறைக்க வல்லது.

* மலச்சிக்கலுக்கு ஆப்பிள் - இது நார்சத்து மிகுந்தது.

* தொண்டை வலிக்கு தேன் - கிருமி நாசினி.

 

* உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்குமாம்.

* வயிற்றுப்போக்குக்கு வாழைப்பழம்- பொட்டாசியம் சத்து நிறைந்தது.

* நீர் சத்து குறைவுக்கு தர்பூசணி- நீர்சத்து மிகுந்தது.

* சதை பிடிப்புக்கு இளநீர்- தாது உப்புகள் நிறைந்தது.

* அஜீரணம் கோளாறுக்கு இஞ்சி - வயிற்று பிரட்டல், அஜீரணம் நீக்கும்.

* சோர்வுக்கு ஓட்ஸ் - சக்தி அளிக்க வல்லது.

* ரத்த சோகைக்கு பசலை கீரை - இரும்பு சத்து அளிப்பது.

இவை 'சிகிச்சை அல்ல' உபசத்தாக பயன்படுத்தலாம்.

Tags:    

Similar News