சிறப்புக் கட்டுரைகள்

சர்ப்ப தோஷங்களும் சாந்தி பரிகாரங்களும்

Published On 2024-04-09 11:21 GMT   |   Update On 2024-04-09 11:21 GMT
  • ராகு, கேதுவின் நல்லாசி பெற்றவர்கள். எதிரிகளை வெல்லும் வலிமை பெற்றவர்கள்.
  • குரு பகவானின் 5, 9 எனும் சிறப்புப் பார்வை பெறும் போது மட்டும் ராகு கேதுக்கள் சுபத்தன்மை பெற முடியும்.

சாயா கிரகங்களான ராகு கேதுக்களே சர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேதுக்கள் அமர்ந்த இடமே ஜாதகரின் யோகம் மற்றும் அவயோகத்தை நிர்ணயிக்கின்றன. ஏனெனில் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கர்ம வினைப் பதிவை சுய ஜாதகத்தில் உள்ள ராகு கேதுக்களே வெளிப்படுத்துகின்றன. அதனால் தான் மீள முடியாத வினைப்பதிவில் இருந்து விடுபட சர்ப்ப வழிபாட்டை ஜோதிட முன்னோடிகள் வலியுறுத்தி வந்தனர்.

யார் இந்த ராகு/கேதுக்கள்?

விஞ்ஞான ரீதியான விளக்கம்

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு குரியனையும் சுற்றுகிறது. ஏனைய கிரகங்களும் அவ்வாறே சூரியனை சுற்றி வருகிறது. பூமியின் துணைகிரகமான சந்திரன் பூமியைச் சுற்றிக் கொண்டே சூரியனையும் சுற்றுகிறது. அவ்வாறு சுற்றி வரும் போது பூமியும் சந்திரனும் ஓரே நேர்கோட்டில் வரும் போது ஓன்றையொன்று இரண்டு இடங்களில் வெட்டிக் கொள்ளும் வெட்டுப்புள்ளியானது ஒன்றுக்கொன்று நேர் எதிரே அமைந்து இருக்கும். அந்த வெட்டுப்புள்ளியே ராகு, கேதுக்கள்.

சந்திரனின் வடக்கு நோக்கிய பயணத்தின் போது ஏற்படும் வெட்டுப்புள்ளி ராகுவாகவும் தெற்கு நோக்கிய பயணத்தின் போது ஏற்படும் வெட்டுப்புள்ளி கேதுவாகும். இந்த இரு புள்ளிகளாகிய ராகுவும் கேதுவும் ஒளியில் ஏற்படும் நிழல் கிரகம் என்பதால் இவற்றை சாயா கிரகங்கள் என்கிறோம். நிழல் எவ்வாறு எதிர் திசையில் நகர்கிறதோ அவ்வாறே ராகு கேதுக்கள் மற்ற கிரகங்கள் சுற்றும் திசைக்கு எதிரில் சுற்றுகிது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றின் ஈர்ப்பு சக்தி ஒருங்கிணைப்பால் பிறக்கின்ற விசை சக்தியான ராகு, கேதுக்கள் மனிதர்களின் வாழ்க்கை ஓட்டத்தை மாற்றும் அளவிற்கு பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

புராண விளக்கம்

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைந்து பெற்ற அதத்தை மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து தேவர்களுக்கு மட்டுமே அதிகமாக பரிமாறிக் கொண்டு இருந்ததை கண்ட "ஸ்வர்பானு" எனும் அசுரன் தன் உருவத்தை தேவர் போல் மாற்றிக் கொண்டு தேவர்களுடன் அமர்ந்து அமுதத்தை உண்டார். இதனை பார்த்த சூரியனும், சந்திரனும் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு விடம் கூற தன்னிடம் இருந்த சட்டுவத்தால் தலையை துண்டித்தார். தலையும் உடலும் பிரிந்தாலும் அமுதம் உண்ட காரணத்தால் அவன் இறக்கவில்லை. பின்பு மனம் இரங்கிய மகாவிஷ்ணு உடலை ஒருங்கிணைத்த போது அவசரத்தால் மனித தலை பாம்பு உடல், பாம்பு தலை மனித உடல் என்று இணைத்து விட்டார். மனித தலை, பாம்பு உடல் ராகு என்ற தன்மையும், பாம்பு தலை, மனித உடல் கேது என்ற தன்மையும் பெற்று அழியா தன்மை அடைந்தனர். பூஜை பலத்தால் நிழல் கிரகங்களாக நவகிரக அந்தஸ்து பெற்றனர்.

சர்ப்ப தோஷத்தை கண்டறியும் எளிய வழி முறைகள்

சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சந்தேக புத்தி இருக்கும். எதையும் திருட்டுத்தனமாக செய்வார்கள். அதீத தாம்பத்ய உணர்வு, ரகசிய உறவு, நாக்கை நீட்டிக் கொண்டே இருப்பவர், நாக்கை நீட்டி உண்பவர் , வஞ்சம் தீர்ப்பவர்களாக இருப்பார்கள். மிகச் சுருக்கமாக பிள்ளைகளால் பிரச்சினைகளை, மன உளைச்சலை அனுபவிப்பவர்களுக்கு சூட்சம முறையான சர்ப்ப தோஷம் நிச்சயம் இருக்கும்.


சர்ப்பங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள்

ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஏழாமிடம், இரண்டு எட்டா மிடம் ஆகிய இடங்களில் அமர்வதால் ஏற்படும் தோஷம் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் அல்லது ராகு கேது தோஷம்.

3-ல் இருந்தால் சகோதர வழி தோஷம்

4-ல் இருப்பதால் ஏற்படுவது மாதூர் தோஷம், சொத்து பிரச்சினை

5-ல் இருப்பதால் ஏற்படுவது புத்திர தோஷம்

9-ல் இருந்தால் பிதுர் தோஷம்

ராகு கேது தங்களுடன் சேர்ந்த கிரகங்களின் காரகத்துவங்களையும், அதன் ஆதி பத்திய காரகத்துவங்களையும் பாதிப்படைய செய்வதனால் ஏற்படுத்தும் சர்ப்ப தோஷங்கள். ராகு கேது தங்களின் நட்சத்திரங்களை மற்ற கிரகங்களுக்கு கொடுப்பதன் மூலம் ஏற்படும் தோஷங்கள். ராகு கேதுக்கள் அசுப கிரகங்களின் ராசி யில் உள்ள போது ஏற்படுத்தும் தோஷங்கள்.

ராகு கேது உச்சம் பெற்று அதன்மூலம் ஏற்படும் தோஷங்கள். இங்கே கூறப்படாத இடங்களான 6, 10, 11, 12 ஆகிய இடங்களில் இருந்தால் தோஷங் களை ஏற்படுத்துவதில்லை. என்றாலும் அவர்களின் காரகத்துவம் சார்ந்த அவர் பெற்ற சுப அசுப தன்மையின் அடிப்படையில் அந்த பாவக காரகத்துவங்கள் பாதிப்படையும். ராகு, கேதுக்கள் சுபத் தன்மை அல்லது பலம் இழக்கும் அமைப்புகள் ராகு, கேது பகை நீசமாக இருந்தால் மட்டுமே உடன் இணையும் கிரகங்கள் பாதிப்படையாது. ஆனாலும் நீசமான சர்ப்ப கிரகங்கள் ஏதாவது நீசபங்க விதிகளின் படி நீசபங்கம் ஆனால் ராகு கேதுக்கள் பலம்பெற்று விடும்.

குரு பகவானின் 5, 9 எனும் சிறப்புப் பார்வை பெறும் போது மட்டும் ராகு கேதுக்கள் சுபத்தன்மை பெற முடியும். அதாவது குருவோடு ராகு/கேதுக்கள் இணையும் போது அவர்கள் குரு சண்டாள யோகம் ஏற்படுத்தி குருவைப் பார்க்கிறார்கள்.

குரு ராகுவையோ கேதுவையோ சமசப்த மமாக பார்த்தால் குருவின் பாதி பலத்தை ராகு-கேதுக்கள் எடுத்துக்கொண்டு குருவை பலமிழக்கச் செய்து விடுகிறார்கள். ஆக குரு பகவானின் ஐந்து, ஒன்பதாம் பார்வைகள் ராகு கேதுக்களுக்கு கிடைக்கும் போது மட்டுமே ராகு/கேதுக்கள் சுபத்தன்மை பெறுகிறார்கள்.

ராகு கேதுகள் எந்த கிரகத்துடனும் சேராத போதும், ராகு கேதுவின் நட்சத்திரத்தில் வேறு கிரகங்கள் இல்லாதபோதும் பலம் இழக்கிறார்கள்.

லக்ன சுபர்களின் சாரம் பெரும் போதும் சுபர்களால் பார்க்கப்படும் போதும் சுபர்கள் உடன் இணையும் போதும் திதி சூனியம் அடைந்த கிரகத்தின் சாரம் பெறும்போதும் தோஷமுள்ள இடத்தில் இருந்து தோஷ மில்லாத இடத்திற்கு பாவகமாற்றம் அடையும் போது பலம் இழக்கும்.

6 12-ல் உச்சம் பெறாமல் அமரும்போதும் 5, 9-ல் பலம் இன்றி அமரும்போதும் 10, 11 பாவகத்தில் அமரும் போதும் முழு தீய பலன்களையும் தருவதில்லை.

நன்மை மட்டுமே செய்யும் ராகு-கேது அமைப்புகள்.

ராசி அதிபதியோடு சேர்ந்தாலும் பார்த்தாலும், ஆட்சி உச்சம் பெற்றாலும் ராகு, கேது நின்ற நட்சத்திர அதிபதிகள் ஆட்சி ,உச்சம் பெற்றாலோ லக்னத்திற்கு திரிகோண, கேந்திரத்தில் அமைந்தாலோ ராகு/கேதுக்கள் சுப பலனை அதிகமாகவும், அசுப பலன்களை குறைவாகவும் செய்கிறது.


ராகு, கேதுவின் நல்லாசி பெற்றவர்கள். எதிரிகளை வெல்லும் வலிமை பெற்றவர்கள்.சர்ப்ப தோஷத்தை 4 வகையாக பிரிக்கலாம்

உத்தம சர்ப்ப தோஷம்

இந்த அமைப்பு உள்ள ஜாதகருக்கு வெளிப்பார்வையில் தோஷம் உள்ள ஜாதகம் போல் இருந்தாலும் எந்த தீங்கும் செய்யாது. இவர்களின் வம்சாவளியினர் சர்ப்பங்களை ஆராதனை செய்பவர்கள். இவர்களின் குல தெய்வம் கூட புற்றுடன் கூடிய அம்மனாக இருக்கும்.

அதம சர்ப்ப தோஷம்

இந்த வகை சர்ப்ப தோஷம் குழந்தை பிறப்பிற்கு முன்பும் பின்பும் சொல்ல முடியாத வகையில் பிரச்சினை தரும். இவை முழுக்க முழுக்க முன் ஜென்மத்தின் கரும வினைப் பதிவே.

கால சர்ப்ப யோகம்:

கால சர்ப்ப யோகம் என்பது லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடியில் அமைந்து இருக்கும். எல்லா கிரகங்களும் ராகுவை நோக்கியே செல்லும். தனித்த ராகு, கேதுவாகவோ, வேறு கிரகங்கள் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் இல்லாத போதும் சுப பலனை நடத்திக் கொண்டே இருக்கும் இதை விபரீத ராஜ யோகம் என்றும் கூறலாம்.

இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும். அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சம்பாதிப்பவர்கள். இந்த அமைப்பு பெற்ற ஜாதகத்தில் ராகு, கேதுவிற்கு லக்ன சுபர்களின் தொடர்பு இருக்கும். ராகு, கேதுவின் தசை புத்தி காலத்தில் மிகவும் சிறப்பான பலனை அடைகிறார்கள். உரிய வயதில் கல்வி, திருமணம், குழந்தை பேறு, தொழில் வாய்ப்பு அமையும். இவர்கள் ராகு, கேதுவின் நல்லாசி பெற்ற வர்கள். எதிரிகளை வெல்லும் வலிமை பெற்றவர்கள்.

காலசர்ப்ப தோஷம்:

லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடியில் இருக்கும். அனைத்து கிரகங்களும் கேதுவை நோக்கி செல்லும். தோஷம் 33 வயது வரை மட்டுமே அதன் பிறகே திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் போன்ற அனைத்து சுப நிகழ்வும் ஏற்படும். நாள்பட்ட திருமணம் அமைந்த போதும் வாழ்க்கை நிம்மதிக் குறைவாகவே உள்ளது. இவர்கள் 4 அடி ஏறினால் 10 அடி சறுக்கும்.

பரிகாரம் சர்ப்ப கிரகங்களால் சுப பலன்களை அனுப விப்பவர்கள் மேலும் சுபத்தை அதிகரிக்க துன்பங்களை அனுபவிப்பவர்கள் இன்னல்களில் இருந்து விடுபட புற்று வழிபாடே சிறப்பானது. ஒவ்வொரு புற்றில் இருக்கும் சர்ப்பத்திற்கும் ஒவ்வொரு வித சக்தி உண்டு. 10 ஆண்டுகளைக் கடந்த சர்பங்கள் தெய்வத்தன்மை பெறுகின்றன. அந்த சர்பங்களின் உடலில் சித்தர்கள் வாசம் செய்கிறார்கள். அந்த புற்றுக்களில் செய்யும் வழிபாடுகள் காரியசித்தி தரும். மேலும் புற்றுக்குள் பால் ஊற்றாமல் மண் பாத்திரத்தில் ஊற்றுங்கள். புற்றுக்குள் இருக்கும் சர்பத்திற்கு எந்த இடையூறும் இல்லா வகையில் வழிபாடு செய்ய வேண்டும்.முறையான புற்று வழிபாடுக்கு பல தலைமுறை சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்யும் வலிமை உண்டு.

Tags:    

Similar News