புதுச்சேரி

ஏனாமில் பகல் 12 மணிக்கே கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவு

Published On 2025-10-28 10:15 IST   |   Update On 2025-10-28 10:15:00 IST
  • ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை.
  • 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. இது மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே இன்றிரவு தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே, 'மோன்தா' புயல் எதிரொலியாக ஏனாமில் இன்று பகல் 12 மணிக்கே கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி அன்கித் குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது. 

Tags:    

Similar News