புதுச்சேரி

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு நர்சிங் மாணவி பலி

Published On 2025-11-09 09:40 IST   |   Update On 2025-11-09 09:40:00 IST
  • மீண்டும் அவருக்கு காய்ச்சல் அதிகமானது.
  • ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சரளா (வயது 45). அவரது கணவர் ராமு ஏற்கனவே இறந்து விட்டார்.

இவர்களது மூத்த மகள் லோகேஸ்வரி (21), இவர் கோரிமேடு அன்னை தெரசா அரசு நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை புதுச்சேரி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து அவரை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே லோகேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலுக்கு நர்சிங் கல்லூரி மாணவி பலியான சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News