இந்தியா

இந்திய பொருளாதாரத்தில் உலகளாவிய நம்பிக்கையை பார்க்கிறோம்: பிரதமர் மோடி

Published On 2023-08-24 11:08 IST   |   Update On 2023-08-24 11:08:00 IST
  • கொள்கை ஸ்திரதன்மையை கொண்டு வந்துள்ளோம்
  • வெளிநாட்டு முதலீடுகளுக்கான தாராள மையம் போன்றவற்றை விரிவாக்கம் செய்துள்ளோம்

ஜி-20 வர்த்தக மற்றும் முதலீடு மந்திரிகளுக்கான மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இன்று இந்திய பொருளாதாரத்தில் உலகளாவிய நம்பிக்கையை நாம் காண்கின்றோம். வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் கலவையாக இந்தியா பார்க்கப்படுகிறது. டிஜிட்டல், புதுமையை ஊக்குவித்தல், தடையில் இருந்து சிகப்பு கம்பளம், வெளிநாட்டு முதலீடுகளுக்கான தாராள மையம் போன்றவற்றை இந்தியா விரிவாக்கம் செய்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக கொள்கை ஸ்திரதன்மையை கொண்டு வந்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை உலக பொருளாதாரத்தில் 3-வது நாடாக உயர்த்த உறுதிபூண்டுள்ளோம்.

நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பது, குறைகளை கையாளும் வழிமுறைகள் ஆகியவற்றில் நுகர்வோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கண்டறிவது அவசியமானது.

சிறுகுறு, நடுத்தர தொழில்கள் மூலம் 60 முதல் 70 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உலக ஜிடிபி-யில் 50 சதவீதம் பங்களிக்கிறார்கள். அவர்களுக்கு நாம் தொடர்ந்து ஆதரவு அளிப்பது அவசியம்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

Similar News