இந்தியா

நிலச்சரிவில் சிக்கிய நோயாளிகள்: ஜிப்லைனில் சென்று சிகிச்சை அளித்த டாக்டர்

Published On 2025-10-10 00:24 IST   |   Update On 2025-10-10 00:24:00 IST
  • டார்ஜிலிங்கில் கடந்த வாரம் கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டது.
  • இந்த நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததால் இர்பானால் அங்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கயிறு கட்டி ஜிப்லைன் போன்று அமைத்து இர்பான் அங்கு சென்றார். அதன்பின் காயமடைந்திருந்த மக்களுக்கு மருத்துவம் செய்தார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது உயிரை துச்சமென மதித்து ஜிப்லைனில் சென்று மருத்துவம் பார்த்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

Similar News