இந்தியா

மும்பை வந்த விஸ்தாரா விமானத்தில் அத்துமீறல்... ஊழியரை தாக்கிய பயணி கைது

Published On 2023-01-31 19:13 IST   |   Update On 2023-01-31 19:13:00 IST
  • விமானத்தில் ஊழியரை தாக்கிய பெண் பயணி, அரை நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.
  • பயணி மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது

மும்பை:

அபுதாபியில் இருந்து மும்பை வந்த விஸ்தாரா விமானத்தில் விமான ஊழியரை தாக்கியது தொடர்பாக இத்தாலிய பெண் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக விஸ்தாரா நிறுவனம் கூறியிருப்பதாவது:-

இத்தாலியைச் சேர்ந்த பவோலா பெருசியோ (வயது 45) என்ற அந்த பெண், எகனாமி வகுப்பு டிக்கெட் வைத்திருந்தார். ஆனால், அந்த பெண், பிசினஸ் வகுப்பு இருக்கையில் உட்கார முயன்றார். இதை விமான ஊழியர் தடுத்தபோது அவரை தாக்கி உள்ளார். அந்த ஊழியரின் முகத்தில் குத்தியதுடன், மற்றொருவரை நோக்கி எச்சில் துப்பி உள்ளார். அத்துடன், அரை நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.

விமானம் மும்பை வந்ததும், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பயணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இவ்வாறு விஸ்தாரா நிறுவனம் கூறி உள்ளது.

இத்தாலி பெண் பயணி மீது வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு அவருக்கு மருத்துவப் பரிசோதனை, சக பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்தல் அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News