இந்தியா

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும்- தேவஸ்தான தலைவர் தகவல்

Published On 2025-10-30 10:21 IST   |   Update On 2025-10-30 10:21:00 IST
  • 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்ய முடியும்.
  • தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும்.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் 5, ஆயிரம் கோவில்கள் கட்டப்பட உள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து தேவஸ்தான கோவில்களிலும் அன்னபிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ரூ.37 கோடியில் 100 அறைகள் கொண்ட தங்குமிட வளாகத்தைக் கட்டவும், மேலும் ரூ.3 கோடியில் ஒண்டிமிட்டாவில் ஒரு புனித வனத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வரும் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் 10 நாட்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதனால் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்ய முடியும்.

இந்த தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும். எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நேரடியாக எத்தனை டோக்கன்கள் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய குழு உறுப்பினர்கள் மற்றும் நிபுணர் குழுவை அமைப்பதற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபுணர் குழு வழங்கும் அறிக்கையை பொறுத்து இன்னும் 20 நாட்களில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

திருப்பதி கோவிலில் நேற்று 64048 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 19838 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.4 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News