இந்தியா

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Published On 2024-03-06 03:20 GMT   |   Update On 2024-03-06 03:20 GMT
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது.
  • தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று மாலை 6 மணி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைய இருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று மாலை 6 மணி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் upsconline.nic.in இணைய தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 26-ந்தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற இருக்கிறது. சுமார் 1056 இடத்திற்காக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

Tags:    

Similar News