இந்தியா

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி எப்போது தொடங்கும்?: மத்திய மந்திரி விளக்கம்

Published On 2024-02-09 06:50 GMT   |   Update On 2024-02-09 07:59 GMT
  • 2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டியும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லையே ஏன்?
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தாமதமாகி வருகின்றன.

புதுடெல்லி:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாகி வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பாராளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் கேள்வி எழுப்பினார்.

2019-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டியும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லையே ஏன்?

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதம் மற்றும் கொரோனா பெரும் தொற்று காரணமாகவும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News