இந்தியா

தாஜ்மகாலுக்கு வந்த அமெரிக்க சுற்றுலா பயணிகள் 2 பேருக்கு கொரோனா

Published On 2023-01-14 03:41 GMT   |   Update On 2023-01-14 03:41 GMT
  • அமெரிக்காவில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் கடந்த வாரம் உத்தரபிரதேசத்துக்கு வந்தனர்.
  • அமெரிக்க சுற்றுலா பயணிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

ஆக்ரா:

அமெரிக்காவில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் கடந்த வாரம் உத்தரபிரதேசத்துக்கு வந்தனர். இந்த சுற்றுலா குழு வாரணாசி நகரை சுற்றி பார்த்துவிட்டு கடந்த 10-ந் தேதி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு வந்தது. அப்போது அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்க சுற்றுலா பயணிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

தற்போது அந்த குழு ராஜஸ்தானுக்கு சென்றுள்ள நிலையில் ஆக்ரா சுகாதாரத்துறை அதிகாரிகள் ஜெய்ப்பூர் நகர சுகாதாரத்துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News