இந்தியா

குழந்தைகளை ஏரியில் தள்ளி கொன்று வாலிபர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது

Published On 2023-03-31 13:51 IST   |   Update On 2023-03-31 13:51:00 IST
  • 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
  • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் பிணங்களை மீட்டனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அனந்தபுரம், புறநகர் பகுதியான ரங்கசாமி நகரை சேர்ந்தவர் ரபி பெல்தாரி (வயது 35). இவரது மனைவி பானு. தம்பதிக்கு இம்ரான் (9),சோஹைல் (6) என இரண்டு மகன்கள் இருந்தனர். பானு டெய்லரிங் கடை நடத்தி வருகிறார். ரபிக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

கடந்த மாதம் இந்துபுரத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் ரபி மற்றும் அவரது தாயார் கலந்து கொண்டனர். திருமண விழா முடிந்து ரபி வீட்டிற்கு வந்தபோது அவரது மனைவி பானு வேறு ஒரு நபருடன் தனிமையில் இருந்தார். இதனை ரபி பார்த்துவிட்டார்.

வேறு ஒரு நபருடன் உள்ள கள்ளத்தொடர்பை துண்டிக்குமாறு மனைவியிடம் கூறினார்.ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிடாததால் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ரபி மனைவியை சரமாரியாக தாக்கினார்.

பின்னர் தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கணவர் மற்றும் குழந்தைகளை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பானு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பொக்கராய செருவு என்ற இடத்தில் உள்ள ஏரியில் ரபி மற்றும் அவரது 2 குழந்தைகளின் பிணம் மிதந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் பிணங்களை மீட்டனர். போலீசாரின் விசாரணையில் 2 குழந்தைகளை ஏரியில் வீசி கொன்றுவிட்டு ரபி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ரபியின் சட்டை பையில் இருந்து 2 கடிதங்களை போலீசார் மீட்டனர்.

மனைவியின் நடத்தை சரியில்லாததால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்கிறேன். கணவர் குழந்தைகள் உள்ள போது வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பது சரியா? அந்த விஷயம் என்னை நோகடித்து விட்டது.

எங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நாங்கள் 3 பேரும் செல்கிறோம். உனக்கு பிடித்த நபருடன் மகிழ்ச்சியாக இரு என உருக்கமாக ரபி எழுதி இருந்தார். பின்னர் 3 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News