இந்தியா

பஞ்சாப்: வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

Published On 2025-09-03 20:56 IST   |   Update On 2025-09-03 20:56:00 IST
  • கனமழை எதிரொலியால் செப்டம்பர் 7 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • பஞ்சாப்பில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரழிவில் இதுவும் ஒன்று என மாநில அரசு தெரிவித்தது.

சண்டிகர்:

வட மாநிலங்களில் பருவ மழை கொட்டி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.

சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, வெள்ளம் காரணமாக செப்டம்பர் 7 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று என மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News