இந்தியா

திருப்பதி கோவிலில் 2023-ம் ஆண்டு உண்டியல் காணிக்கை ரூ.1,398 கோடி

Published On 2024-01-01 08:50 IST   |   Update On 2024-01-01 08:50:00 IST
  • கடந்த டிசம்பர் மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.116 கோடி கிடைத்தது.
  • கோவில் வரலாற்றில் தொடர்ந்து 22-வது முறையாக உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது.

திருமலை:

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.116 கோடி கிடைத்தது. இது, கோவில் வரலாற்றில் தொடர்ந்து 22-வது முறையாக உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2023-ம் ஆண்டு ஏழுமலையான் கோவிலில்2 கோடியே 52 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஒரு ஆண்டு உண்டியல் காணிக்கையாக ரூ.1,398 கோடி கிடைத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News