இந்தியா

இந்தியாவில் புதிதாக 111 பேருக்கு கொரோனா: தொடர்ந்து 3-வது நாளாக பலி இல்லை

Published On 2023-02-01 06:12 GMT   |   Update On 2023-02-01 06:12 GMT
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்த நேற்று 83 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 372 பேர் குணமடைந்து உள்ளனர்.
  • கொரோனா தொற்று பாதிப்பால் தொடர்ந்து 3-வது நாளாக புதிய உயிரிழப்புகள் இல்லை.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 111 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. பாதிப்பு நேற்று முன்தினம் 80, நேற்று 65-ஆக இருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு பாதிப்பு மீண்டும் 100-ஐ தாண்டியுள்ளது.

மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 895-ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்த நேற்று 83 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 372 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1,783 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 28 அதிகமாகும். தொற்று பாதிப்பால் தொடர்ந்து 3-வது நாளாக புதிய உயிரிழப்புகள் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,740 ஆக நீடிக்கிறது.

Tags:    

Similar News