இந்தியா

10 மணிநேரம்.. மக்களவையில் அனல் பறக்கப்போகும் SIR மீதான விவாதம் - ராகுல் தலைமையில் குழு ரெடி!

Published On 2025-12-08 05:18 IST   |   Update On 2025-12-08 05:18:00 IST
  • இந்த முழு விவாதத்திற்கும் மொத்தம் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வாக்கு மோசடி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நமபகத்தன்மை குறித்த பிரச்சினையை எழுப்புவார்

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு திருத்தம் குறித்த முக்கியமான விவாதம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகள் கோரிய விவாதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குவார்.

இந்த விவாதத்தில் ராகுல் தலைமையின்கீழ் காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முஹம்மது ஜாவேத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் சவுத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் பதி, ஜோதிமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த முழு விவாதத்திற்கும் மொத்தம் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

விவாதத்தின் போது, ராகுல் காந்தி வாக்கு மோசடி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நமபகத்தன்மை குறித்த பிரச்சினையை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News