இந்தியா

விமான பயணத்தின் போது நிர்மலா சீதாராமனுடன் 'செல்பி' எடுத்த இளம்பெண்

Published On 2023-05-17 12:56 IST   |   Update On 2023-05-17 12:56:00 IST
  • ஆர்சூ என்ற இளம்பெண் பெங்களூருக்கு விமானத்தில் வந்த போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.
  • ஆர்சூ பகிர்ந்த பதிவை அதிகமானோர் பார்வையிட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அரசியல் தலைவர்கள், பிரபலங்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ள இளைஞர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் குருகிராமை சேர்ந்த ஆர்சூ என்ற இளம்பெண் பெங்களூருக்கு விமானத்தில் வந்த போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.

ஜோமோடோவில் டெவலப்பராக பணியாற்றி வரும் ஆர்சூ, நிர்மலா சீதாராமனுடன் எடுத்த புகைப்படத்தை 'பீக் பெங்களூரு' என்ற பிரத்யேக இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நிர்மலா மேடம், நிதி மந்திரி இருக்கும் அதே விமானத்தில் ஏறும் வாய்ப்பு கிடைத்தது, இது எனக்கு சந்தோஷமாக உள்ளது என்ற தலைப்புடன் பகிரப்பட்ட அவரது பதிவை அதிகமானோர் பார்வையிட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News