இந்தியா

சாமி முன்பு சத்தியம் செய்ய மறுத்த இளம்பெண் வெட்டிக்கொலை- கணவர் ஆத்திரம்

Published On 2022-08-11 11:15 GMT   |   Update On 2022-08-11 11:15 GMT
  • சோகையா தனது மனைவியிடம் நீ குற்றம் அற்றவள் என்றால் காணிப்பாக்கம் விநாயகர் கோவில் குளத்தில் மூழ்கி சாமி முன்பாக குற்றம் அற்றவள் என சத்தியம் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
  • மனைவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் இருந்த சோகையா வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஆலமடுகு பகுதியை சேர்ந்தவர் சோகைய்யா. இவருக்கும் லீலா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அவினாஷ் (5), லோகேஸ்வரி (3) என ஒரு மகன், மகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக லீலாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சோகைய்யா அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது சோகைய்யா தனது மனைவியிடம் நீ குற்றம் அற்றவள் என்றால் காணிப்பாக்கம் விநாயகர் கோவில் குளத்தில் மூழ்கி சாமி முன்பாக குற்றம் அற்றவள் என சத்தியம் செய்ய வேண்டும் எனக் கூறினார்.

இதற்கு லீலா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சோகைய்யா நேற்று காலை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.

இதில் படுகாயம் அடைந்த லீலா வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லீலா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெதுரு குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சோகைய்யாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News