இந்தியா

கேரளாவில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து- தொழிலாளி படுகாயம்

Published On 2022-10-29 10:24 GMT   |   Update On 2022-10-29 10:24 GMT
  • ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
  • விபத்து நடந்த இடத்தை மக்களவை எம்பி ராஜ்மோகன் உன்னிதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கட்டிட தொழிலாளி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்தை மக்களவை எம்பி ராஜ்மோகன் உன்னிதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News