இந்தியா
நடுவானில் திடீர் புகை- அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்
- விமானத்தின் கேபினில் புகை வந்ததை பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.
- பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து ஜபல்பூர்ருக்கு இன்று காலை ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது.
ஸ்பைஸ்ஜெட் விமானம், 5000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்தபோது விமானத்தின் கேபினில் புகை வந்ததை பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.
புகை வந்ததை தொடர்ந்து விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.