இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 ஆக அதிகரிப்பு

Published On 2023-09-13 09:30 IST   |   Update On 2023-09-13 09:30:00 IST
  • அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.13,650 மற்றும் மினி அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.7,800 வழங்கப்படுகிறது.
  • மாநில அரசின் முடிவால் மாநிலம் முழுவதும் உள்ள 70,000 அங்கன்வாடிகள் பயன்பெறும் என்றார்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி ஆசிரியர்கள், மினி அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களின் ஓய்வுபெறும் வயது 60-ல் இருந்து 65 ஆக மாநில அரசு உயர்த்தியுள்ளது.

இதற்கான அரசாணையை நேற்று அரசு வெளியிட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோட், இந்த நடவடிக்கைக்கு முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு நன்றி தெரிவித்தார்.

அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நாட்டிலேயே தெலுங்கானா அரசு அதிக சம்பளம் வழங்கி வருவதாக கூறிய அவர், அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.13,650 மற்றும் மினி அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.7,800 வழங்கப்படுகிறது.

மாநில அரசின் இந்த முடிவால் மாநிலம் முழுவதும் உள்ள 70,000 அங்கன்வாடிகள் பயன்பெறும் என்றார்.

Tags:    

Similar News