இந்தியா (National)

ஓட்டல் அறையில் பதிவுத்துறை அதிகாரி மர்ம மரணம்

Published On 2023-07-25 05:07 GMT   |   Update On 2023-07-25 05:09 GMT
  • போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து அஷரப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • காசர்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பரப்பூரை சேர்ந்தவர் அஷ்ரப்(வயது55). பதிவுத்துறையின் மாவட்ட அதிகாரியான இவர் காசர்ஜகோடு நுள்ளிப்பாடியில் உள்ள தங்கும் விடுதியில் அடிக்கடி தங்குவாராம். அதன்படி சம்பவத்தன்று அங்கு தங்கியிருந்த அவர், மறுநாள் வெகுநேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது குளியலறையில் அஷ்ரப் இறந்துகிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து அஷரப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காசர்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டல் அறையில் பதிவுத்துறை அதிகாரி மர்மமாக இறந்துகிடந்த சம்பவம் காசர்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News