இந்தியா

கேரளாவில் 4-ந்தேதி வரை மழை நீடிக்கும்: 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Published On 2023-12-01 04:38 GMT   |   Update On 2023-12-01 05:35 GMT
  • அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு.
  • கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரித்துள்ளது.

திருவனந்தபுரம்:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த மழை வருகிற 4-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் புயல், காற்று, இடியுடன் மழை பெய்தது. மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இன்று பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Tags:    

Similar News