இந்தியா

மகாராஷ்டிரா சட்டசபையின் புதிய சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்வு

Published On 2022-07-03 06:30 GMT   |   Update On 2022-07-03 06:30 GMT
  • சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர்.
  • ராகுல் நர்வேகர் 160-க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று சபாநயகராக தேர்வாகியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு, பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். புதிய முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதல் மந்திரியாக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து ஷிண்டே தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.

சட்டசபை கூட்டத்தின் முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி சார்பில் அக்கட்சியின் எம்எல்ஏ ராகுல் நர்வேகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராகுல் நர்வேகர் 160-க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று சபாநயகராக தேர்வாகியுள்ளார்.

Tags:    

Similar News