இந்தியா

வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும்- பிரதமர் மோடி

Published On 2022-11-12 08:52 IST   |   Update On 2022-11-12 08:52:00 IST
  • வாக்காளர்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை ஆற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
  • முதல் முறையாக வாக்களிக்க உள்ள அனைத்து மாநில இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது.

தேர்தலில், 55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். தேர்தலையொட்டி 7,884 வாக்கு சாவடிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை ஆற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முதல் முறையாக வாக்களிக்க உள்ள அனைத்து மாநில இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News